News April 24, 2024
₹50 லட்சம் நன்கொடை வழங்கிய சிவகார்த்திகேயன்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குக் கட்டடம் கட்ட நடிகர் சிவகார்த்திகேயன் ₹50 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார். பணப் பிரச்னையால் தடைபட்டிருந்த தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடப் பணி நேற்றுப் பூஜையுடன் மீண்டும் தொடங்கியது. இதையடுத்து முன்னணி நடிகர்கள் பலரும், நன்கொடை அளித்து வருகின்றனர். அந்த வகையில், நன்கொடை வழங்கிய சிவகார்த்திகேயனுக்கு நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
Similar News
News April 13, 2026
BREAKING: டாஸ்மாக் 3 நாட்கள் விடுமுறை

தமிழகத்தில் ஏப்.23-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து ECI சற்றுமுன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்.21- 23-ம் தேதி இரவு வரை அனைத்து டாஸ்மாக் கடைகளும், பார்களும் கட்டாயம் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி, கள்ளச்சந்தையில் மதுபானங்களை விற்பனை செய்தால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
News April 13, 2026
கழுத்தைப் பிடித்து தள்ளாத குறை.. OPS வேதனை

EPS-ஆல் தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு தேர்தலில் மக்கள் தீர்வு தருவார்கள் என OPS கூறியுள்ளார். அதிமுகவில் இருந்து தானாக வெளியேறவில்லை என்றும், அநியாயமாக கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக வெளியேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி, அவரை அதிமுகவில் இருந்து EPS நீக்கியது குறிப்பிடத்தக்கது. <<-se>>#TNElection2026<<>>
News April 13, 2026
நிர்மலா சீதாராமன் கடிதத்தில் இருப்பது என்ன?

➤அதீத உற்பத்தியால் தேவைக்கு அதிகமான கோதுமை & அரிசி கையிருப்பு உள்ளது ➤சில மாநில அரசுகள், கூடுதல் போனஸ் அறிவித்துள்ளதால் இவற்றின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் ➤இதற்கு அதிக நீர்,உரம் தேவைப்படுவதால் நிலத்தடி நீர் வற்றுதல், மண் சிதைவு ஏற்படுகிறது ➤எண்ணெய் வித்துக்கள் & பருப்பு வகை உற்பத்தி போதுமானதாக இல்லை ➤கோதுமை, நெல்லுக்கான ஊக்கத்தொகையை நிறுத்தி, பருப்பு வகைகளுக்கு கொடுப்பது பற்றி பரிசீலியுங்கள்.


