News March 16, 2024
சிவகங்கை: போலி செய்தி அனுப்பிய பெண் கைது

சிங்கம்புணரி அடுத்த சிங்கமங்கலப்பட்டி பகுதியில் குழந்தைகளை கடத்த முயற்சி நடப்பதாக வாட்ஸ்அப் மூலம் போலி செய்திகள் வெளியானது. இது குறித்து எஸ்.பி டோங்கரே பிரவீன் உமேஷ் உத்தரவின்படி, எஸ்.வி.மங்கலம் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. விசாரணையில் வாட்ஸ்அப் மூலம் போலியான செய்தியை பரப்பியது ஒழுகமங்கலத்தை சேர்ந்த ஆனந்தவள்ளி என தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 17, 2025
சிவகங்கை: அரசு ITI ல் சேர அவகாசம் நீட்டிப்பு..!

சிவகங்கை ஐடிஐயில், காலியாகவுள்ள குறிப்பிட்ட தொழிற்பிரிவுகளுக்கான நேரடி மாணவர் சேர்க்கை வருகின்ற 30.9.2025 ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, பயிற்சியின் போது பயிற்சியாளர்களுக்கு அரசால் வழங்கப்படும் உதவித்தொகை மாதம் ரூ.750/- இலவச பாடப்புத்தகங்கள், விலையில்லா மிதிவண்டி, சீருடைகள் காலணிகள், இலவச பஸ்பாஸ் ஆகியவை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார். SHARE IT
News September 17, 2025
சிவகங்கை: கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு இ.சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News September 17, 2025
சிவகங்கை: 50% மானியத்தில் வாங்க மிஸ் பண்ணாதீங்க!

சிவகங்கை மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா? அப்போ தமிழக அரசு கொடுக்கும் 5,000 மானியத்தை புடிங்க. தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்கள் வயது 25க்கு மேல் இருந்தால் தாராளமாக APPLY பண்ணலாம். தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவரிடம் விண்ணப்பியுங்க தொடர்புக்கு:04575-240426. மற்றவர்களுக்கும் SHARE செய்து APPLY பண்ண சொல்லுங்க.