News March 16, 2024
சிவகங்கை: போலி செய்தி அனுப்பிய பெண் கைது

சிங்கம்புணரி அடுத்த சிங்கமங்கலப்பட்டி பகுதியில் குழந்தைகளை கடத்த முயற்சி நடப்பதாக வாட்ஸ்அப் மூலம் போலி செய்திகள் வெளியானது. இது குறித்து எஸ்.பி டோங்கரே பிரவீன் உமேஷ் உத்தரவின்படி, எஸ்.வி.மங்கலம் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. விசாரணையில் வாட்ஸ்அப் மூலம் போலியான செய்தியை பரப்பியது ஒழுகமங்கலத்தை சேர்ந்த ஆனந்தவள்ளி என தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 4, 2025
சிவகங்கை: வீடு கட்டும் கடன் மோசடி; 5 பேருக்கு கடுங்காவல்

இலங்கை தமிழ் அகதிகளுக்கு வீடு கட்டுவதற்காக ரூ.4கோடி 35லட்சம் கடனாக வழங்க தமிழக அரசு ஒதுக்கிய தொகையை 435இலங்கை அகதிகளுக்கு வழங்கியதாக போலி பதிவுகள் தயாரித்து, அரசு நிதியில் இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக தாசில்தார் சர்தார், ஒப்பந்தக்காரர் கதிரேசன், முத்து – 3ஆண்டு கடுங்காவல், ரூ.30,000 அபராதம், தினேஷ்குமார்,ராமர் – 2 ஆண்டு கடுங்காவல்,ரூ.15,000 அபராதமும் சிவகங்கை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
News December 4, 2025
சிவகங்கை: வீடு கட்டும் கடன் மோசடி; 5 பேருக்கு கடுங்காவல்

இலங்கை தமிழ் அகதிகளுக்கு வீடு கட்டுவதற்காக ரூ.4கோடி 35லட்சம் கடனாக வழங்க தமிழக அரசு ஒதுக்கிய தொகையை 435இலங்கை அகதிகளுக்கு வழங்கியதாக போலி பதிவுகள் தயாரித்து, அரசு நிதியில் இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக தாசில்தார் சர்தார், ஒப்பந்தக்காரர் கதிரேசன், முத்து – 3ஆண்டு கடுங்காவல், ரூ.30,000 அபராதம், தினேஷ்குமார்,ராமர் – 2 ஆண்டு கடுங்காவல்,ரூ.15,000 அபராதமும் சிவகங்கை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
News December 3, 2025
அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டம், தமிழக முதலமைச்சரால் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த மகளிருக்கு, அவ்வையார் விருது வழங்கப்படவுள்ளது. தகுதிகளுடைய சமூக சேவை புரிந்த பெண்கள் வருகின்ற 31.12.2025 ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.


