News March 16, 2024
சிவகங்கை: போலி செய்தி அனுப்பிய பெண் கைது

சிங்கம்புணரி அடுத்த சிங்கமங்கலப்பட்டி பகுதியில் குழந்தைகளை கடத்த முயற்சி நடப்பதாக வாட்ஸ்அப் மூலம் போலி செய்திகள் வெளியானது. இது குறித்து எஸ்.பி டோங்கரே பிரவீன் உமேஷ் உத்தரவின்படி, எஸ்.வி.மங்கலம் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. விசாரணையில் வாட்ஸ்அப் மூலம் போலியான செய்தியை பரப்பியது ஒழுகமங்கலத்தை சேர்ந்த ஆனந்தவள்ளி என தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 8, 2025
சிவகங்கை: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடனுதவி!

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News December 8, 2025
சிவகங்கை: பூட்டிய வீட்டில் 3 பவுன் நகை கொள்ளை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கண்டவராயன்பட்டியைச் சேர்ந்த சாத்தப்பன் குடும்பத்துடன் கோயம்புத்தூரில் வசித்து வருகிறார். திருக்கார்த்திகைக்காக ஊருக்கு வந்து தீபம் ஏற்றிய பின் மீண்டும் கோயம்புத்தூருக்கு சென்ற நிலையில், அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர். இது குறித்து கண்டவராயன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 8, 2025
சிவகங்கை: செய்தியாளரின் கண்கள் தானம்.!

திருப்புவனத்தில் தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்த கண்ணன் என்பவர், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது திடீர் மறைவால் குடும்பத்தினரும், நண்பர்களும், சக ஊழியர்களும் கடும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, கண்ணனின் குடும்பத்தினர் மனிதாபிமானத்துடன் அவரது கண்களை தானமாக வழங்கினர். இதன்மூலம் இரண்டு பேருக்கு பார்வை கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.


