News March 16, 2024
சிவகங்கை: போலி செய்தி அனுப்பிய பெண் கைது

சிங்கம்புணரி அடுத்த சிங்கமங்கலப்பட்டி பகுதியில் குழந்தைகளை கடத்த முயற்சி நடப்பதாக வாட்ஸ்அப் மூலம் போலி செய்திகள் வெளியானது. இது குறித்து எஸ்.பி டோங்கரே பிரவீன் உமேஷ் உத்தரவின்படி, எஸ்.வி.மங்கலம் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. விசாரணையில் வாட்ஸ்அப் மூலம் போலியான செய்தியை பரப்பியது ஒழுகமங்கலத்தை சேர்ந்த ஆனந்தவள்ளி என தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 20, 2026
சிவகங்கையில் இன்று இங்கெல்லாம் மின்தடை

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மின்பராமரிப்பு பணி காரணமாக இன்று (ஜன.20) செவ்வாய்க்கிழமை சாலை கிராமம், வண்டல், சூராணம், முத்துராமலிங்கபுரம், வல்லக்குலம், ராதாப்புளி, வடக்கு சாலை கிராமம், கோட்டையூர், அதிகரை, அண்டக்குடி, சிறுபாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை. காரைக்குடி சுற்றுவட்டாரத்தில் இன்று அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News January 20, 2026
சிவகங்கையில் இன்று இங்கெல்லாம் மின்தடை

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மின்பராமரிப்பு பணி காரணமாக இன்று (ஜன.20) செவ்வாய்க்கிழமை சாலை கிராமம், வண்டல், சூராணம், முத்துராமலிங்கபுரம், வல்லக்குலம், ராதாப்புளி, வடக்கு சாலை கிராமம், கோட்டையூர், அதிகரை, அண்டக்குடி, சிறுபாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை. காரைக்குடி சுற்றுவட்டாரத்தில் இன்று அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News January 19, 2026
காரைக்குடியில் நாளை மின்தடை ரத்து

காரைக்குடி துணை மின் நிலையத்தில், நாளை 20.01.2026 செவ்வாய்கிழமை அன்று நடைபெற இருந்த மாதாந்திர பராமரிப்பு பணி நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது. எனவே நாளை அறிவிக்கப்பட்ட மின்தடை இருக்காது. வழக்கம்போல் மின் விநியோகம் இருக்கும் என காரைக்குடி சுற்றுவட்டார மின் பகிர்மான செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


