News August 17, 2025
2047-க்குள் ஒற்றை அடுக்க ஜிஎஸ்டி?

ஜி.எஸ்.டியில் பெரும் சீர்த்திருத்தம் நடைபெறவுள்ளதாக தெரிகிறது. இதுவரை 5, 12, 18, 28 என 4 அடுக்காக ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்ட நிலையில், இனி 5, 18 ஆகிய 2 அடுக்குகள் மட்டுமே நடைமுறையில் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை இது அமலுக்கு வந்து, இந்தியா வளர்ந்த நாடாக மாறினால் 2047-க்குள் ஒற்றை அடுக்கு ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News August 17, 2025
கட்சி பொறுப்பில் இருந்து முத்தரசன் விடுவிப்பு?

இந்திய கம்யூ., கட்சியின் மாநில பொறுப்பிலிருந்து முத்தரசன் விடுவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 75 வயதான முத்தரசன், 3 முறை மாநிலச் செயலாளர் பதவியை வகித்துவிட்டார். இதனால், இன்று சேலத்தில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டில், துணை நிர்வாகப் பொறுப்பில் உள்ள வீரபாண்டியன், சந்தானம் அல்லது பெரியசாமி ஆகியோரில் ஒருவர் புதிய மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
News August 17, 2025
ஆவணி ஞாயிற்றுக்கிழமையும்.. சூரிய வழிபாடும்!

ஆவணி ஞாயிற்றுக்கிழமையில், பூஜைக்காக அர்ச்சனை தட்டில் அரிசி, குங்குமம், சிவப்பு நிற மலர்கள், ஏதேனும் ஒரு பழம் ஆகியவற்றை வைக்க வேண்டும். சூரியன் உதிக்கும் திசை நோக்கி விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ஒரு சொம்பில் தண்ணீரை எடுத்து பகவானை நோக்கி வழிபட்டுக் கொண்டே, நீரை அர்ச்சனைத் தட்டின் மீது தெளிக்க வேண்டும். மாலை வரை தண்ணீர், பால், பழங்கள் ஆகியவற்றை மட்டுமே எடுத்துக் கொண்டு விரதமிருக்க வேண்டும்.
News August 17, 2025
ED சோதனை வெறும் ஏமாற்று வேலை: சீமான்

ED நடவடிக்கை வெறும் ஏமாற்று வேலை என சீமான் விமர்சித்துள்ளார். அமைச்சர் ஐ.பெரியசாமி வீடுகள் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் E.D சோதனை நடத்தியுள்ளது. இதுபற்றி பேசிய சீமான், ED சோதனையால் என்ன பயன், என கேள்வி எழுப்பிய அவர், ED எங்கெல்லாம் சோதனை நடத்துகிறதோ அங்கெல்லாம் அவர்கள் பணம் வாங்கியிருப்பதாகவும், அதற்கெல்லாம் ஆதாரம் வேண்டுமானால் தானே தருவதாகவும் தெரிவித்தார்.