News February 13, 2025
ஒரே மேடையில் சிம்பு – தனுஷ் – SK?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739387170937_785-normal-WIFI.webp)
Dawn Pictures தயாரிக்கும் 4வது படத்தின் Title Announcement வீடியோ இன்று வெளியாகிறது. இதன் அறிவிப்பு தொடர்பான நிகழ்ச்சியில் தங்கள் தயாரிப்பில் நடித்த அனைத்து ஹீரோக்களையும் ஒரே மேடையில் ஏற்ற அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்நிகழ்ச்சியில் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகிய மூவரும் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவங்க 3 பேரும் ஒரே மேடைக்கு வருவாங்க?
Similar News
News February 13, 2025
புதிய வருமான வரி மசோதா இன்று தாக்கல்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739408775122_1241-normal-WIFI.webp)
புதிய வருமான வரி மசோதா பார்லிமென்ட்டில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில், 536 பிரிவுகள் உள்ளன. தற்போதுள்ள சட்டத்தில் 14 அட்டவணைகள் உள்ள நிலையில், புதிய சட்டத்தில் இது 16ஆக அதிகரிக்கும். இருப்பினும் 23 அத்தியாயங்களே இருக்கும். அதேநேரம் புதிய வருமான வரி மசோதா 622 பக்கங்களைக் கொண்டதாக இருக்கும். மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஆய்வுக்காக JPCக்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News February 13, 2025
கார்த்தியின் கேங்ஸ்டர் படத்தின் புது தகவல்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739408963897_1173-normal-WIFI.webp)
கார்த்தியின் 29ஆம் படம் 2 பாகங்களாக உருவாகி வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் இயக்குகிறார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ராமநாதபுரம் பகுதியில் கடல் பின்னணியைக் கொண்ட கேங்ஸ்டர் கதைக்களத்தில் படம் உருவாவதாகக் கூறப்படுகிறது. கார்த்தி தற்போது ‘சர்தார் 2’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
News February 13, 2025
குவியும் வங்கதேசத்தினர்.. தமிழகத்திற்கு புதிய ஆபத்து!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739407926057_1241-normal-WIFI.webp)
திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய தொழில் நகரங்களில் சட்டவிரோதமாக ஏராளமான வங்கதேசத்தினர் நுழைந்துள்ளனர். திருப்பூரில் மட்டும் கடந்த சில வாரங்களில் 50க்கும் அதிகமானோர் சிக்கியுள்ளனர். உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்ட இவர்கள் அசாம் வழியாகத் தமிழகத்தில் நுழைந்தது தெரியவந்துள்ளது. எவ்வித ஆவணங்களும் இன்றி ஊடுருவும் இவர்களை முறைப்படுத்தாவிட்டால் தமிழகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து என பலரும் எச்சரிக்கின்றனர்.