News March 19, 2024

ஐபிஎல்லில் புதிய அவதாரமெடுக்கும் சித்து

image

ஐபிஎல்லில் வர்ணனையாளராக நவ்ஜோத் சிங் சித்து செயல்படவுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரான அவர், காங்கிரஸில் சேர்ந்து முழு நேர அரசியல்வாதியாக உள்ளார். இந்நிலையில், விரைவில் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் அவர் வர்ணனையாளராக செயல்படவுள்ளார். ஐபிஎல் தொடரின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை வைத்துள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில், இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 12, 2025

ஏறுமுகத்தில் இந்திய சந்தைகள்!

image

மும்பை தேசிய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கின. இதில், சென்செக்ஸ் 352 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, 85,170 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டி 109 புள்ளிகள் உயர்ந்து, 26,007-ஐ எட்டியுள்ளது. உலகளாவிய சந்தைகளின் வலுவான ஆதரவு காரணமாக ஏற்றம் காணப்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் உலோக பங்குகளே அதிகம் லாபம் ஈட்டி, சந்தைக்கு ஊக்கமளித்துள்ளன.

News December 12, 2025

காதல் திருமண மோதல் வழக்கில் அதிரடி கைது!

image

மதம் மாறி திருமணம் செய்த இளைஞரின் குடும்பத்தினர் 4 பேரை சரமாரியாக வெட்டிய பெங்களூரு கும்பலில் 9 பேரை TN போலீசார் கைது செய்தனர். பெங்களூரு நாகவராவை சேர்ந்த ராகுல் டேனியல், அதே பகுதியை சேர்ந்த கீர்த்தனாவை காதலித்து வந்தார். வேளாங்கண்ணியில் நேற்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. மணப்பெண்ணின் உறவினர்கள், டேனியல், அவரது அம்மா உள்ளிட்ட 4 பேரை வெட்டிவிட்டு கீர்த்தனாவை பெங்களூருவுக்கு கடத்தி சென்றனர்.

News December 12, 2025

வைடு வீசுவதில் பாரி வள்ளலாக மாறிய இந்திய அணி

image

SA-வுக்கு எதிரான <<18538227>>2-வது டி20-ல் இந்தியா<<>> படுதோல்வியை சந்திக்க இந்தியா விட்டுக்கொடுத்த Extras-ம் முக்கியமான காரணமாக அமைந்தது. அதிலும் இந்திய பந்துவீச்சாளர் 16 வைடுகளை வீசியது ரசிகர்களை எரிச்சலடைய வைத்தது. இதில் அர்ஷ்தீப் மட்டும் 9 வைடுகளை வீசினார். இதற்கு பனி ஒரு காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் SA பந்து வீசும்போது இதைவிட அதிகமான பனி இருந்தும் அவர்கள் ஒரு வைடு மட்டுமே வீசியுள்ளனர்.

error: Content is protected !!