News March 19, 2024
ஐபிஎல்லில் புதிய அவதாரமெடுக்கும் சித்து

ஐபிஎல்லில் வர்ணனையாளராக நவ்ஜோத் சிங் சித்து செயல்படவுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரான அவர், காங்கிரஸில் சேர்ந்து முழு நேர அரசியல்வாதியாக உள்ளார். இந்நிலையில், விரைவில் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் அவர் வர்ணனையாளராக செயல்படவுள்ளார். ஐபிஎல் தொடரின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை வைத்துள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில், இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 27, 2025
குளிர்கால குதிகால் வெடிப்பா? இதை ட்ரை பண்ணுங்க

குளிர்காலத்தில் குதிகால் வெடிப்பு என்பது மிகவும் பொதுவான பிரச்னையாகும். இது பெரும்பாலும் வறண்ட சருமம் மற்றும் கவனிப்பு குறைவால் நிகழ்கிறது. சிறிது கவனம் செலுத்தினால் போதும், குதிகால்களை மென்மையாக வைத்துக்கொள்ளலாம். எளிய முறையில் என்னவெல்லாம் செய்யலாம் என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. கமெண்ட் பண்ணுங்க.
News October 27, 2025
ஸ்ரேயஸ் உடல்நிலை குறித்து BCCI விளக்கம்

<<18116578>>ஸ்ரேயஸ் ஐயர்<<>> நலமுடன் இருப்பதாக BCCI தெரிவித்துள்ளது. மேலும், ஸ்கேன் எடுத்து பார்த்ததில் அவர் வேகமாக குணமாகி வருவதாகவும், BCCI மற்றும் சிட்னி டாக்டர்கள் குழு அவரை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளது. இதற்கிடையே ஸ்ரேயஸின் பெற்றோர்கள் அவசர அவசரமாக ஆஸி.,க்கு புறப்பட்டு சென்றுள்ளனர். ஆஸி.,க்கு எதிரான 3-வது ODI போட்டியின் போது, அவருக்கு விலா எலும்பில் அடிபட்டது.
News October 27, 2025
தீவிர புயல்: நாளை பள்ளிகளுக்கு இங்கு விடுமுறை

‘மொன்தா’ புயல் தீவிரமடைவதால், புதுச்சேரியின் ஏனாமில் நாளை, நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்று கனமழை பெய்து வருகிறது. இதனால், நாளை விடுமுறை அளிக்க பெற்றோர், மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விரைவில் அறிவிக்க உள்ளனர்.


