News December 4, 2024
தீராத நோய்களை தீர்க்கும் சித்தேஸ்வரர்

கிழவனையும் குமரனாக்கும் மருத்துவத்தை கண்ட திருமூலரின் மரபில் வந்த காலங்கி சித்தர் தவம் இருந்த திருத்தலமே சேலத்தை அடுத்த கஞ்சமலையாகும். அங்குள்ள இறைவன் பெயராலேயே சித்தேஸ்வரர் கோயில் என இத்தலம் போற்றப்படுகிறது. ஏராளமான மூலிகைகள் உள்ள இம்மலையில் கிரிவலம் வந்து, இறைவனை வணங்கி உப்பு-மிளகு வாங்கி போட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றினால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.
Similar News
News January 17, 2026
மீண்டும் இணையும் ‘சூதுகவ்வும்’ காம்போ!

‘சூதுகவ்வும்’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கிய ‘காதலும் கடந்து போகும்’ வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்நிலையில், ‘கை நீளம்’ என்ற புதிய படத்தில் இருவரும் இணைய உள்ளதாக நலன் குமாரசாமி தெரிவித்துள்ளார். ‘சூதுகவ்வும் 2-ம் பாகமாக உருவாக்க திட்டமிடப்பட்டிருந்த இந்த கதையில், சரியான கிளைமாக்ஸ் அமையாததால் பெரிய இடைவெளி ஏற்பட்டுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
News January 17, 2026
வாடிவாசலுக்கு விரைந்தார் முதல்வர் ஸ்டாலின்!

ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க, CM ஸ்டாலின் மதுரை, அலங்காநல்லூருக்கு விரைந்துள்ளார். காலை 7:30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து 1,100 காளைகளுக்கும், அவற்றை அடக்க 600 காளையர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளன. இன்றைய போட்டியில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு ₹20 லட்சம் மதிப்பிலான காரும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு ஒரு டிராக்டரும் பரிசாக வழங்கப்படவுள்ளன.
News January 17, 2026
நுரையீரல் கழிவுகளை நீக்கும் அமுக்கரா தேநீர்!

நுரையீரலில் கோர்த்துக் கொண்டிருக்கும் சளியை வெளியேற்றும் ஆற்றல் அமுக்கரா இலைக்கு இருப்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். அமுக்கரா இலை (3-4), மிளகு, மஞ்சள், சுக்கு, திப்பிலி, கிராம்பு, பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை நீரில் போட்டு, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான அமுக்கரா தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம். SHARE IT.


