News December 4, 2024
தீராத நோய்களை தீர்க்கும் சித்தேஸ்வரர்

கிழவனையும் குமரனாக்கும் மருத்துவத்தை கண்ட திருமூலரின் மரபில் வந்த காலங்கி சித்தர் தவம் இருந்த திருத்தலமே சேலத்தை அடுத்த கஞ்சமலையாகும். அங்குள்ள இறைவன் பெயராலேயே சித்தேஸ்வரர் கோயில் என இத்தலம் போற்றப்படுகிறது. ஏராளமான மூலிகைகள் உள்ள இம்மலையில் கிரிவலம் வந்து, இறைவனை வணங்கி உப்பு-மிளகு வாங்கி போட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றினால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.
Similar News
News September 16, 2025
மூலிகை: ஏழைகளின் நோய் விரட்டி எருக்கு!

விஷம் என ஒதுக்கும் எருக்கம் செடியில் பல மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடப்பதாக சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படுகிறது *செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதில், எருக்க இலையை அடுக்கிக் காலால் மிதித்தால், குதிகால் வலி நீங்கும் *செடியின் இலைகளை நெருப்பில் போட்டு எரித்து, அந்த புகையை சுவாசித்தால் மார்புச்சளி கட்டுப்படும் *இலையை நெருப்பில் வாட்டி, கட்டிகள் மேல் கட்டினால், அவை உடையும். SHARE IT.
News September 16, 2025
பாக்.,வுடன் கைகுலுக்கவேண்டிய கட்டாயம் இல்லை: BCCI

ஆசிய கோப்பை போட்டியில் PAK அணியினருக்கு இந்திய வீரர்கள் கைக்கொடுக்காமல் போனதற்கு, போட்டி முடிந்தவுடன் கைகுலுக்க வேண்டும் என்பது எந்த விதியிலும் இல்லை என BCCI விளக்கமளித்துள்ளது. முன்னதாக, இந்தியாவின் இந்த செயலால் கடும் அதிருப்திக்கு உள்ளான பாக்., ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் புகாரளித்திருந்தது. இதனால், போட்டி முடிந்தவுடன் கைக்கொடுப்பது கட்டாயம் இல்லை என BCCI-யின் அதிகாரி கூறியுள்ளார்.
News September 16, 2025
X கணக்கில் CM ஸ்டாலின் செய்த மாற்றம்

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்ற பிரச்சாரத்தை CM ஸ்டாலின் தீவிரமாக முன்னெடுத்துள்ளார். அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுகவினர் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழி எடுத்திருந்தனர். இந்த நிலையில், CM ஸ்டாலின் X கணக்கில் தனது பெயருடன் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என இணைத்துள்ளார். அதேபோல, புரொபைல் போட்டோவிலும் ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என்பதை சேர்த்துள்ளார்.