News March 17, 2024

அணியில் இணைந்தார் ஷ்ரேயஸ் ஐயர்

image

2024 ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில், கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் அணியில் இணைந்துள்ளார். முதுகு வலி காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய அவர், தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார். சமீபத்தில் நடந்த ரஞ்சி கோப்பை தொடரில் மீண்டும் முதுகில் காயம் ஏற்பட்டதால், ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம் என தகவல்கள் பரவி வந்தன. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Similar News

News September 3, 2025

TNPSC குரூப் 4: ஜனாதிபதிக்கு தேர்வர்கள் கடிதம்

image

கடந்த ஜூலை 12-ல் நடைபெற்ற TNPSC குரூப் 4 தேர்வு, முனைவர் பட்ட அளவிலான கேள்விகளை உள்ளடக்கி இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சீலிடப்படாத கேள்வித்தாள்கள் இருந்ததாகவும் தேர்வர்கள் புகார் அளித்தனர். இந்நிலையில், மறுதேர்வு நடத்த வேண்டும், குளறுபடிகளுக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200 பேர் கையெழுத்திட்ட மனுவை ஜனாதிபதி, PM, கவர்னர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளனர்.

News September 3, 2025

ஆப்கனுக்கு 21 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிய இந்தியா

image

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3,000-க்கும் அதிகமானோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்தியா நிவாரணப் பொருள்களை அனுப்பியுள்ளது. போர்வைகள், டெண்ட்டுகள், மருந்து பொருள்கள், தண்ணீர் டேங்கர்கள், வீல்சேர்கள், சானிட்டைசர் உள்ளிட்ட 21 டன் நிவாரண பொருள்களை அனுப்பியதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

News September 3, 2025

50% வரி விதிக்க சொன்னதே மோடி தான்: ஆ.ராசா

image

50% வரியை டிரம்ப் விதிக்கவில்லை, அதை போடச் சொன்னதே PM மோடி தான் என்று ஆ.ராசா சாடியுள்ளார். USA-வின் கூடுதல் வரிவிதிப்புக்கு எதிராக திருப்பூரில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மோடியும், அமித்ஷாவும் இந்தியாவை விற்றுக் கொண்டிருப்பதாகவும், அம்பானியும் அதானியும் இந்தியாவை வாங்குவதாகவும் குற்றஞ்சாட்டினார். USA-வின் வரிவிதிப்பால் தமிழகத்திற்கு அதிக பாதிப்பு என ஸ்டாலின் கூறியிருந்தார்.

error: Content is protected !!