News November 24, 2024
பஞ்சாப் கேப்டன் ஆகிறாரா ஷ்ரேயஸ் ஐயர்!

IND வீரர் ஷ்ரேயஸ் ஐயரை ஐபிஎல் மெகா ஏலத்தில் PBKS அணி ₹26.75 கோடிக்கு வாங்கியது. அவரை ஏலத்தில் எடுக்க பஞ்சாப், டெல்லி அணிகள் கடுமையாக போட்டி போட்டன. 2 இந்திய வீரர்களை மட்டுமே தக்கவைத்து மெகா ஏலத்திற்கு வந்த PBKS அணிக்கு முதலில் தேவைப்பட்டது ஒரு நல்ல கேப்டன் தான். இதனால் தான் கடுமையான போட்டிக்கு நடுவிலும் அவரை வாங்கியது. 2024லில் கோப்பையை வென்ற KKR அணி கேப்டன் ஷ்ரேயஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 18, 2025
வடிவேலு மாமா துரோகம் செய்தார்: விஜயகாந்த் மகன்

சொந்த மாமாவைபோல் வடிவேலுவை பார்த்ததாக விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார். ஆனால், வடிவேலு தங்களை ஏமாற்றி விட்டதாகவும், சின்ன வயதிலேயே துரோகத்தை பார்த்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அதனால், இப்போது யார் என்ன செய்தால் என்ன என்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2011 சட்டப்பேரவை தேர்தலின்போது விஜயகாந்தை வடிவேலு கடுமையாக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
News August 17, 2025
அக்டோபர் 1 முதல் Gpay, Phonepeல் இந்த வசதி கிடையாது!

அவசர பணத்தேவை இருக்கும்போது, நண்பர்களிடம் போன் பண்ணி கடன் கேட்க தயங்குபவர்கள் கூட Gpay, Phonepe-ல் ஈசியாக MONEY REQUEST கொடுத்து வந்தனர். பணம் அனுப்பும் பகுதியிலுள்ள REQUEST அம்சம் மூலம் இதனை செய்யலாம். UPI பரிவர்த்தனைகளில் இந்த வசதியை அக். 1 முதல் நிறுத்த NPCI முடிவு செய்துள்ளது. பரிவர்த்தனை பாதுகாப்பை வலுப்படுத்தி மோசடிகளை தடுக்கவே இந்த முடிவாம். இனி டிஜிட்டலில் கடன் கேட்க முடியாது நண்பர்களே!
News August 17, 2025
நாளை டிரம்ப்பை சந்திக்கும் ஜெலன்ஸ்கி

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் நாளை டிரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ரஷ்ய அதிபர் புடினுடன் கடந்த 15-ம் தேதி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், நாளை இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. போர் நிறுத்தம் தொடர்பாக எந்த உடன்படிக்கையும் எட்டப்படாத நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.