News March 1, 2025
ஸ்ரேயா கோஷல் X தள பக்கம் முடக்கம்

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் X தள பக்கம் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பிப்ரவரி 13ஆம் தேதி முதலே தனது X தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது பெயரிலுள்ள அந்த கணக்கில் வரும் எந்த செய்தியையும் நம்ப வேண்டாம் எனவும் ரசிகர்களுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News March 1, 2025
உங்களிடம் ₹100, ₹200, ₹500 நோட்டு இருந்தா இதை பாருங்க

ரூபாய் நோட்டுகளின் நுனிப்பகுதியில் கோடுகள் இருப்பது ஏன் என தெரியுமா?. பார்வை குறைபாடு உள்ளவர்கள் நோட்டின் மதிப்பை அடையாளம் காண, இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோடுகள் ₹100, ₹200, ₹500 நோட்டுகளில் மட்டும்தான் இருக்கும். ஒவ்வொரு கோட்டிற்கு தகுந்தார் போல வரிகள் இருக்கும். எ.கா: ₹100 தாளில் அதன் இருபுறமும் 4 கோடுகள் இருக்கும். ₹200ல் 4 வரிகளுக்கு இடையில் வட்ட புள்ளிகள் இருக்கும்.
News March 1, 2025
அட இது தெரியாம போச்சே! தினமும் 15 நிமிடம் போதும்

செல்லப்பிராணிகளுடன், தினசரி 15 நிமிடம் செலவிட்டால், நம் மனநிலையை பாதிக்கக்கூடிய, ஆறு நரம்பியல் கடத்திகள் சமநிலை அடைவதாக அரசு உதவி கால்நடை டாக்டர் மெரில்ராஜ் கூறியுள்ளார். ‘Animal Assisted Therapy’ முறையை சுட்டிக்காட்டும் அவர், வீட்டில் வளரும் செல்லப்பிராணிகளுடன், தினசரி 15 நிமிடம் செலவிட்டால் போதும், ரத்த அழுத்தம் இயல்பாவதோடு, மன அழுத்தம், சோர்வு, கவலை, பயம், பதற்றம் குறையும் என்கிறார்.
News March 1, 2025
உயரும் இந்தியாவின் செல்வாக்கு: PM மோடி

உலகளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த மாநாட்டில் பேசிய அவர், உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்தியாவுக்கு வர விரும்புவதாகவும், உலகிற்கு புதிய பொருளாதார பாதையை இந்தியா காட்டியுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார். மேலும், உலக நாடுகளின் தொழிற்சாலையாக இந்தியா மாறியுள்ளதாகவும், இந்தியாவின் வெற்றியை விரிவாக அறிய உலகம் விரும்புவதாகவும் கூறினார்.