News April 26, 2025

பாகிஸ்தானுடன் இனி விளையாடக்கூடாது : கங்குலி

image

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட்டை இந்தியா முற்றிலும் துண்டிக்க வேண்டும் என வலியுறுத்திய சவுரவ் கங்குலி, ஐசிசி மற்றும் ஆசிய போட்டிகளில் கூட பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்றும் கங்குலி தெரிவித்தார். முன்னதாக, எந்தவொரு போட்டியிலும் பாகிஸ்தானுடன் இந்தியா மோதப் போவதில்லை என பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.

Similar News

News December 4, 2025

எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

image

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், உலக எய்ட்ஸ் தினம் 2025 முன்னிட்டு எச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (டிச.04) கையொப்பமிட்டு துவக்கி வைத்தார். உடன் உதவி ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தனர்.

News December 4, 2025

பிஸ்கெட்டில் துளை இருப்பது ஏன் தெரியுமா?

image

பலரது ஃபேவரைட்டாக இருக்கும் பிஸ்கெட்டில் துளைகள் இருப்பது ஏன் என என்றாவது யோசித்திருக்கிறீர்களா? பிஸ்கெட்டில் உள்ள துளைகள் ‘Dockers’ என அழைக்கப்படுகிறது. பேக்கிங் செய்யும்போது மாவு மிகவும் உப்பிவிடக்கூடாது எனவும் பிஸ்கெட் கிரிஸ்பியாக வரவேண்டும் என்றும் இந்த செய்முறை பின்பற்றப்படுகிறது. இப்படி செய்வதால் பிஸ்கெட் உடையாமலும் இருக்குமாம். 1% பேருக்கு மட்டுமே தெரியும், SHARE THIS.

News December 4, 2025

BREAKING: இன்றே தீபம் ஏற்ற கோர்ட் உத்தரவு

image

திருப்பரங்குன்றத்தில் விதிக்கப்பட்டிருந்த 144 தடையை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். திருப்பரங்குன்றம் வழக்கை மீண்டும் ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து வருகிறார். அப்போது மதுரை காவல் ஆணையர் மற்றும் கலெக்டரிடம் கோர்ட் உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், தீபத்தூணில் இன்று இரவு 7 மணிக்குள் தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!