News March 22, 2024
நீரின்றி அமையாது உலகு..!

நீரின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. பூமியில் உள்ள அனைத்து உயிரினங்கள் உயிர் வாழத் தண்ணீர் அவசியம். தண்ணீரிலிருந்து தான் உயிரின தோற்றங்கள் உருவாகியதாக ஆராய்ச்சிகளில் கூறப்படுகிறது. இயற்கையின் கொடையான தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தத் தவறினால், எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கை கேள்விக்குறி தான்.!
Similar News
News April 27, 2025
பஹல்காம் இந்து – முஸ்லீம் மோதல் அல்ல: காஜல் ஆவேசம்!

பஹல்காம் தாக்குதல் குறித்து பதிவிட்டுள்ள காஜல் அகர்வால், ‘இது இந்து – முஸ்லீம் பிரச்னை கிடையாது, பயங்கரவாதத்திற்கும், மனிதநேயத்திற்கும் இடையே நடக்கும் பிரச்னை’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘பிரிவினை எப்போதும் பயத்தையும், அதிக வெறுப்புணர்வையும் மட்டுமே உருவாக்கும் என சுட்டிக்காட்டி, இந்த சமயத்தில் தான் அனைவரும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும்’ எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
News April 27, 2025
வெள்ளி விலை 4 மாதங்களில் ரூ.14,000 அதிகரிப்பு

கடந்த ஜன. 1-ம் தேதி 1 கிராம் வெள்ளி ரூ.98ஆகவும், 1 கிலோ ரூ.98,000ஆகவும் விற்கப்பட்டது. பிறகு ஜெட் வேகத்தில் உயர்ந்த விலை, குறையவே இல்லை. சுமார் 2 வாரங்களாக விலை மாறாமல் 1 கிராம் ரூ.111ஆகவும், 1 கிலோ ரூ.1.11 லட்சமாகவும் விற்கப்பட்டது. நேற்று திடீரென 1 கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.112ஆகவும், 1 கிலோ ரூ.1,000 அதிகரித்து ரூ.1.12 லட்சமாகவும் விற்கப்பட்டது. இன்றும் அதே விலையில் விற்கப்படுகிறது.
News April 27, 2025
செந்தில் பாலாஜி இன்று ராஜினாமா?

அமைச்சர் பதவியை இன்று மாலை (அ) நாளை காலை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்யக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மோசடி வழக்கில் அமைச்சர் பதவியா, ஜாமீனா என முடிவெடுக்க நாளை வரை SC கெடு விதித்தது. இதை சுட்டிக்காட்டிய திமுக வட்டாரங்கள், ஜாமீனை தக்க வைக்க பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய உள்ளார், கோவையில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சிக்கு பிறகு அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறுகின்றன.