News March 10, 2025

ஏழைகள் கந்துவட்டிக்கு பலிகடா ஆவதா? சீமான் ஆவேசம்

image

வங்கி நகைக்கடன் குறித்த புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற சீமான் வலியுறுத்தியுள்ளார். நகைகளை அசல், வட்டி செலுத்தி திருப்பிய பின்னர் மறுநாள் தான், அதே நகைகளை வைத்து பணம் பெற முடியும் என்பது, ஏழைகளை கந்துவட்டி வாங்க வைக்கும் கொடும் அணுகுமுறை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, வட்டியை மட்டும் செலுத்தி, நகையை மறு அடகு வைக்க இயலும் பழைய நடைமுறையே தொடரப்பட கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News March 11, 2025

இன்றைய (மார்ச் 11) நல்ல நேரம்

image

▶மார்ச்- 11 ▶மாசி – 27 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM & 01:30 PM – 02:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 07:30 PM – 08:30 PM ▶ராகு காலம்: 03:00 AM – 04:30 AM ▶எமகண்டம்: 09:00 PM – 10:30 PM ▶குளிகை: 12:00 AM- 01:30 AM ▶திதி: திரயோதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: பூராடம் ▶நட்சத்திரம் : ஆயில்யம்.

News March 11, 2025

பெரும் சைபர் தாக்குதலுக்கு உள்ளான ‘X’: மஸ்க்

image

X தளம் முடங்கியது குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் விளக்கமளித்துள்ளார். அதாவது, X தளம் மீது பெரும் சைபர் தாக்குதல் நடப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தினமும் நடப்பதாகவும், இதன் பின்னணியில் ஒரு குழு (அ) நாடு இருக்கலாம் என சந்தேகித்துள்ளார். தாக்குதல் நடத்தியது யார் என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் X தளம் நேற்று ஒரே நாளில் 3 முறை முடங்கியது.

News March 11, 2025

சைலண்ட் ஹீரோ.. ஸ்ரேயாஸை புகழ்ந்த ரோஹித்

image

இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை சைலண்ட் ஹீரோ என்று கேப்டன் ரோஹித் சர்மா புகழ்ந்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி குறித்து பேசுகையில், தாம் துவக்க ஆட்டக்காரராக 79 ரன்கள் குவித்ததை சுட்டிக்காட்டினார். ஒருவேளை தாம் ரன் குவிக்க தவறினாலும் ஸ்ரேயாஸ், அக்சருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து தனது பணியை செய்திருப்பார் என்றும் ரோஹித் கூறினார். இப்போட்டியில் ஸ்ரேயாஸ் 48 ரன்கள் சேர்த்தார்.

error: Content is protected !!