News May 15, 2024
சுலோவேகியா நாட்டு பிரதமர் மீது துப்பாக்கி சூடு

சுலோவேகியா நாட்டு பிரதமர் ராபர்ட் பிகோ (59) இன்று பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென பிகோவை நோக்கி 4 முறை துப்பாக்கியால் சுட்டதில், அவருக்கு வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த மர்மநபரை கைது செய்த காவலர்கள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 28, 2025
காற்றுமாசு விவகாரத்தில் மோடி மௌனம் சரியா? ராகுல் காந்தி

டெல்லியில் காற்று மாசுபாடு குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். தங்கள் குழந்தைகள் விஷக்காற்றை சுவாசித்து வருவதாக ஒவ்வொரு தாய்மாரும் வேதனைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். குழந்தைகள் மூச்சுத்திணறலால் துடிக்கும் போது மோடி அமைதியாக இருப்பது சரியா என கேள்வி எழுப்பியுள்ளார். உங்கள் அரசு ஏன் எந்த அவசர நடவடிக்கையும் எடுக்கவில்லை என சாடியுள்ளார்.
News November 28, 2025
புயல் அலர்ட்: 10 மாவட்டங்களில் அடைமழை வெளுக்கும்

டிட்வா புயல் எதிரொலியாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்குமாறு CM ஸ்டாலினும் அறிவுறுத்தியுள்ளார். ஆகையால், பாதுகாப்பாக இருங்கள் மக்களே!
News November 28, 2025
இந்தியாவின் GDP தரவுகளுக்கு ‘C’ கிரேடு: IMF

IMF மதிப்பாய்வில், இந்தியாவின் GDP தரவுகளுக்கு ‘C’ கிரேடு வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார கணக்குகள் எவ்வளவு துல்லியமாக உள்ளன என்பதை பொறுத்து, இந்த கிரேடுகள் (A- சிறப்பு, B-போதுமானது, C-தரம் குறைவு, D-போதுமானதாக இல்லை) வழங்கப்படுகின்றன. இந்த கிரேடு காரணமாக, உலகளவில் நாட்டின் நம்பகத்தன்மையில் கேள்வி எழும் என்றும், முதலீடுகள் பாதிக்கப்படலாம் எனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


