News June 27, 2024
தேசிய தேர்வு முகமையில் ஊழியர்கள் பற்றாக்குறை

தேசிய தேர்வு முகமையில் (என்டிஏ) ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாக தமிழ்நாடு, புதுவை, ஒடிசா காங்கிரஸ் பொறுப்பாளர் அஜோய் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக பேசிய அவர், ஆண்டுக்கு 25 தேர்வுகளை நடத்தும் என்டிஏ.வில் 25 நிரந்தர ஊழியர்கள் கூட இல்லை என விமர்சித்துள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் நடவடிக்கைகளில் என்டிஏ ஈடுபட கூடாது எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News November 7, 2025
ரஷ்ய எண்ணெய் வாங்குவதை குறைத்த இந்தியா: டிரம்ப்

இந்தியாவுடனான வர்த்தக உறவு நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்குவதாக கூறி இந்தியா மீது டிரம்ப் கூடுதல் வரி விதித்திருந்தார். இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், PM மோடி அழைப்பின் பேரில் அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு வரவுள்ளதாகவும் அவர் பேசியுள்ளார்.
News November 7, 2025
மீண்டும் புயல் சின்னம்.. மழை வெளுக்கப் போகுது

வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதனால் நவ.15-ம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. IMD தகவலின்படி இன்று ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே, வெளியே சென்றால் குடையுடன் செல்லுங்கள்.
News November 7, 2025
இன்று 9.50 மணிக்கு ‘வந்தே மாதரம்’ பாடுங்க: மத்திய அரசு

தேச உணர்வூட்டும் வந்தே மாதரம் பாடலை இன்று காலை 9.50 மணி அளவில் பொதுமக்கள் பாட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 1875-ல் வங்க எழுத்தாளர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ஆனந்த மடம் நாவலில் இப்பாடல் இடம்பெற்றது. இன்று, அதன் 150-வது ஆண்டை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி நினைவு அஞ்சல் தலை மற்றும் நாணயத்தை PM மோடி வெளியிடுகிறார்.


