News June 20, 2024
ATM இயந்திரங்களுக்கு தட்டுப்பாடு

ATM இயந்திரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வங்கிகள் கவலை தெரிவித்துள்ளன. இதுகுறித்து மத்திய அரசு, RBI-க்கு விடுத்துள்ள கோரிக்கையில், Make in India திட்டத்தின் தாக்கம், GeM தளம் மூலம் ATM கொள்முதல் செய்யும் விதிகளில் தெளிவின்மை ஆகியவை காரணமாக கூறப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட நாட்டில் பல ATM இயந்திரங்களில் ₹100, ₹200 நோட்டுகள் கிடைப்பதில்லை என மக்கள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 11, 2025
ஸ்டாலின் குடும்பத்தால் வதைபடும் தமிழ்நாடு: EPS

பத்திரப்பதிவு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் திமுக ஊழல் செய்துள்ளதாக EPS குற்றம்சாட்டியுள்ளார். கவர்ச்சியான அறிவிப்புகள் மூலம் மக்களை ஏமாற்றி, திமுக ஆட்சியை பிடித்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார். ஸ்டாலின், சபரீசன், உதயநிதி, துர்கா ஸ்டாலின் என மொத்தம் 4 முதல்வர்கள் திமுக ஆட்சியில் உள்ளதாகவும், இந்த அதிகார மையங்களே தமிழ்நாட்டை வாட்டி வதைப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.
News September 11, 2025
ASIA CUP: வங்கதேசத்திற்கு 144 ரன்கள் இலக்கு

ஆசியக் கோப்பையில் ஹாங்காங்கிற்கு எதிராக டாஸ் வென்ற வங்கதேசம், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஹாங்காங் வீரர்கள் ஒருநாள் போட்டியை போல நிதானமாகவே விளையாடினர். இதனால் ரன்கள் ஆமைவேகத்திலேயே ஏற, அதிகபட்சமாக நிஷகத் கான் 42 ரன்கள் எடுத்தார். இறுதியில் யாஷிம் முர்டசா அதிரடியாக 28 ரன்கள் அடித்து அணியை சற்று மீட்டெடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் ஹாங்காங் 143/7 ரன்களை எடுத்துள்ளது.
News September 11, 2025
கனமழை: நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?

நாளை மயிலாடுதுறை, நாகை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இன்று இரவு வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சி, தி.மலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாகை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.