News April 22, 2024

மே 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடைகள் இயங்காது

image

41-வது வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மே 5ஆம் மதுரையில் மாநாடு நடைபெறும் என வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார். இதனால், மே 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து வணிகர்களை காப்பாற்றுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

Similar News

News January 2, 2026

பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

image

CBSE-ல் பயிலும் 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் சார் கல்வி (SKILL EDUCATION) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, கணிதம், அறிவியல் போல திறன் சார் கல்வியும் இனி ஒரு பாடமாக இருக்கும். இதில், AI, கோடிங், கைவினை பொருள்கள் தயாரித்தல் உள்ளிட்டவை குறித்து கற்பிக்கப்படும். இதனால், மாணவர்கள் தங்களது தனித் திறனை வளர்த்து கொள்ளலாம்.

News January 2, 2026

ஜன.19-ல் திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு

image

கடந்த டிச.29-ல் பல்லடத்தில் ‘திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு’ நடைபெற்றது. இந்நிலையில், ஜன.19-ல் தஞ்சை செங்கிப்பட்டியில் ‘திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு’ நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனிமொழி தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் CM ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். தேர்தல் பணிகளுக்கு நிர்வாகிகளை தயார்படுத்தும் விதமாக அடுத்தடுத்து மாநாடுகளை திமுக நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

News January 2, 2026

PM KISAN அடுத்த தவணைத் தொகை எப்போது கிடைக்கும்?

image

PM KISAN திட்டத்தின் 22-வது தவணைத் தொகையை (₹2,000) மத்திய அரசு அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தவணைத் தொகை தாமதமின்றி கிடைக்க, விவசாயிகள் e-KYC அப்டேட் செய்வது அவசியம். <>pmkisan.gov.in<<>> இணைய பக்கம் சென்று திட்டத்தில் பயனடைந்துவரும் விவசாயிகள் e-KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். SHARE IT.

error: Content is protected !!