News March 29, 2024

ஏப்.19 வரை கடையடைப்பு போராட்டம்

image

தேர்தல் விதிகளால் வணிகர்களுக்கு பாதிப்பு தொடர்ந்தால் தமிழகம் முழுவதும் ஏப்.19 வரை கடையடைப்பு போராட்டம் நடக்கும் என வணிகர் சங்க பேரமைப்புதலைவர் விக்கிரமராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் நடைமுறையால் வணிகர்கள் அச்சுறுத்தப்படுவதாக அவர் வேதனை தெரிவித்தார். மேலும், தேர்தல் செலவினம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வணிகர்கள் எடுத்துச் செல்லும் ரொக்கத் தொகை உயர்த்தப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.

Similar News

News November 28, 2025

சமயலறை சாதி கொடூரம்: 6 பேர் குற்றவாளிகள்

image

திருப்பூர் அருகே 2018-ல் அரசுப்பள்ளியில் பட்டியலின பெண் உணவு சமைப்பதற்கு ஊர் மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த பெண்ணுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சாதிய வன்கொடுமை தொடர்பான வழக்கில், 36 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 7 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வழக்கில் தொடர்புடைய 4 பேர் உயிரிழந்த நிலையில், 25 பேர் விடுவிக்கப்பட்டனர்.

News November 28, 2025

விஜய் முதல்வராவது உறுதி: செங்கோட்டையன்

image

தனது மூச்சு உள்ளவரை விஜய்க்கு விசுவாசமாக இருப்பேன் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதிமுக, திமுக ஆகிய 2 ஆட்சிகளையும் மக்கள் விரும்பவில்லை என தெரிவித்த அவர், 2026-ல் விஜய் முதல்வராவார் எனவும் கூறியுள்ளார். மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதற்காக ₹500 கோடி வருவாயை தூக்கி எறிந்துவிட்டு விஜய் வந்துள்ளதாகவும் செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்.

News November 28, 2025

நாளை பள்ளிகள் விடுமுறை… கலெக்டர்கள் அறிவிப்பு

image

புயல் எதிரொலியாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை(நவ.28) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நாளை சனிக்கிழமை என்பதால் பள்ளிகளுக்கு வழக்கம்போல் விடுமுறை என்றும், தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!