News November 19, 2024
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் லூசியானா மாகாணம் அல்மான்ஸ்டர் அவென்யூ பாலத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். அதே போன்று நியூ ஆர்லஸ் நகரில் பேரணியில் பங்கேற்றவர்கள் மீதும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் காயமடைந்தனர். இந்த 2 துப்பாக்கி சூடு சம்பவங்களையும் நடத்தியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 17, 2025
முதலில் SBI.. அடுத்து HDFC.. உயரும் கட்டணம்!

<<17416427>>SBI வங்கியை<<>> தொடர்ந்து IMPS முறையில் பணப் பரிமாற்றம் செய்வதற்கான கட்டணங்களை HDFC வங்கியும் உயர்த்தியுள்ளது. அதன்படி, ₹1,000 வரை ₹2.5, ₹1,000 – ₹1 லட்சம் வரை ₹5, ₹1 லட்சத்திற்கு மேல் ₹15 உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், NEFT முறையில் பணம் அனுப்புவதற்கும் ₹24 வரை கட்டணம் அதிகரித்துள்ளது. மேலும், சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு இனி 1 ஆண்டுக்கு 10 பக்கங்களை கொண்ட செக் புக் மட்டுமே இலவசம். SHARE IT.
News August 17, 2025
தவறான புகாரால் எங்களை மிரட்ட முடியாது: ஞானேஷ்குமார்

அரசியலமைப்பின் வழியில் தன்னாட்சி அமைப்புடன் இயங்கும் தங்களை தவறான புகாரால் யாரும் மிரட்ட முடியாது என ECI தலைமை ஆணையர் ஞானேஷ்குமார் கூறியுள்ளார். BJP-க்கு ஆதரவாக மகாராஷ்டிரா, கர்நாடகா, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் ECI, வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் குற்றம்சாட்டினார். மேலும், ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
News August 17, 2025
பொன்னியின் செல்வன் போல் திராவிட மாடல் ஆட்சி: ரகுபதி

அசல் வாக்காளர்கள் தங்களுக்கு வாக்குகளைச் செலுத்தினாலே திமுக வென்றுவிடும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். CM தொகுதியில் 9,000 போலி வாக்குகள் இருந்ததாக <<17426871>>அனுராக்<<>> தாக்கூர் கூறியிருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ரகுபதி, தங்களுக்கு போலி வாக்காளர்கள் தேவையில்லை என்றார். பொன்னியின் செல்வனைப் போல் 2-ம் பாகம், 3-ம் பாகம் என திராவிட மாடல் ஆட்சி தொடரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.