News March 26, 2025

‘ஆசை’ பட பாணியில் அதிர்ச்சி… கம்பி எண்ணும் கணவர்!

image

அஜித்தின் ஆசை படத்தில் மனைவியின் தங்கை மீது மோகம் கொண்ட பிரகாஷ்ராஜ், மனைவியை கொலை செய்வார். அதே போன்ற சம்பவம் உ.பி.யில் நடந்துள்ளது. திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த அங்கித் குமார், தனது மனைவியின் தங்கையை மணக்க ஆசைப்பட்டுள்ளார். இதற்கு இடையூறாக இருந்த மனைவி கிரணை நண்பர் உதவியுடன் அவர் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளது. கண்ணை மறைத்த ஆசையால் அங்கித் கம்பி எண்ணுகிறார்.

Similar News

News March 26, 2025

இரண்டில் உங்களின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் எந்த படம்?

image

நாளை இரு பெரிய படங்கள் ட்ரீட் கொடுக்க காத்திருக்கின்றன. ‘சித்தா’ அருண்குமார் விக்ரம் கூட்டணியில் ‘வீர தீர சூரன்’ படம் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. அதே நேரத்தில், மலையாள சினிமாவே பெரிய அளவில் எதிர்பார்க்கும் படமாக உள்ளது ‘எம்புரான்’. தமிழகத்திலும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல டாக் இருக்கிறது. இரண்டுமே பெரிய எதிர்பார்ப்புகளை கொண்டுள்ள படங்கள். உங்களின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் எது?

News March 26, 2025

BJP ஆட்சியில் உ.பி. அமைதியாக இருக்கிறது: யோகி

image

உ.பியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் எந்தவொரு மதக்கலவரமும் நடக்கவில்லை என CM யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால், முஸ்லிம்களும் பாதுகாப்பாக இருப்பார்கள். 100 இந்து குடும்பங்களுக்கு மத்தியில் வாழும் முஸ்லிம் குடும்பம் பாதுகாப்பாக இருக்கிறது. ஆனால், 100 முஸ்லிம் குடும்பங்கள் மத்தியில் 50 இந்துக்கள் பாதுகாப்பாக இருக்க முடியுமா? வங்கதேசமே சிறந்த உதாரணம் என்றார்.

News March 26, 2025

கள்ளக்காதல்: யோகா டீச்சரை தீர்த்துக் கட்டிய வீட்டு ஓனர்!

image

ஹரியானாவில் மாயமான யோகா டீச்சர் ஜெகதீப் 3 மாதங்களுக்குப் பின் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். 7அடி ஆழ போர்வெல் பள்ளத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் டேப் ஒட்டப்பட்ட நிலையில் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கிறார். இந்த கொடூரமான கொலையை செய்தவர் ஜெகதீப் குடியிருந்த வீட்டு ஓனர் ஹர்தீப். தனது மனைவியுடன் தகாத உறவில் இருந்ததால் தீர்த்துக் கட்டியதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!