News March 26, 2025
‘ஆசை’ பட பாணியில் அதிர்ச்சி… கம்பி எண்ணும் கணவர்!

அஜித்தின் ஆசை படத்தில் மனைவியின் தங்கை மீது மோகம் கொண்ட பிரகாஷ்ராஜ், மனைவியை கொலை செய்வார். அதே போன்ற சம்பவம் உ.பி.யில் நடந்துள்ளது. திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த அங்கித் குமார், தனது மனைவியின் தங்கையை மணக்க ஆசைப்பட்டுள்ளார். இதற்கு இடையூறாக இருந்த மனைவி கிரணை நண்பர் உதவியுடன் அவர் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளது. கண்ணை மறைத்த ஆசையால் அங்கித் கம்பி எண்ணுகிறார்.
Similar News
News December 10, 2025
ஆணவக்கொலை வழக்கை இழுத்தடிக்கும் அரசு: கௌசல்யா

உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப்படுகொலை வழக்கை தமிழக அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக கௌசல்யா குற்றஞ்சாட்டியுள்ளார். கொலைக்கு காரணமானவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து SC-யில் மேல்முறையீடு செய்தோம். அங்கு துணையாக நிற்க வேண்டிய அரசு மெத்தனப்போக்கு காட்டியது. நீதி கிடைத்தால் சாதிய வாக்குகள் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில், வழக்கை இழுத்தடிக்க முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News December 10, 2025
3 EX அமைச்சர்கள்.. EPS-க்கு ஷாக் கொடுக்க போகும் KAS

வரும் 18-ம் தேதி ஈரோட்டிற்கு விஜய் வரும்போது, சில அதிமுக EX அமைச்சர்கள் தவெகவில் இணைவார்கள் என செங்கோட்டையன் கூறியிருந்தார். அதன்படி, கொங்கு மண்டலத்தில் EPS மீது அதிருப்தியில் இருக்கும் 2 EX அமைச்சர்கள் மற்றும் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு EX அமைச்சர் என மூவர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது EPS-க்கு அதிர்ச்சி தருவதாக இருக்கும் என்றும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
News December 10, 2025
இது என்னடா சோழர் கோயிலுக்கு வந்த சோதனை!

பெங்களூருவில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சோழர் காலத்து சோமேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இங்கு, இனிமே இளம்ஜோடிகளுக்கு திருமணமே செய்து வைக்க கூடாது முடிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டுக்கு தெரியாமல் போலியான ஆவணங்களை தயாரித்து ஜோடிகள் திருமணம் செய்வதாகவும், இதனால் அவர்களது பெற்றோர்கள் கோர்ட்டை நாடுவதால், திருமணத்தை நடத்தி வைத்த பூசாரிகள் கோர்ட்டே கதி என்ற அலைகின்றனர். அதனால் தான் இந்த முடிவாம்.


