News March 26, 2025

‘ஆசை’ பட பாணியில் அதிர்ச்சி… கம்பி எண்ணும் கணவர்!

image

அஜித்தின் ஆசை படத்தில் மனைவியின் தங்கை மீது மோகம் கொண்ட பிரகாஷ்ராஜ், மனைவியை கொலை செய்வார். அதே போன்ற சம்பவம் உ.பி.யில் நடந்துள்ளது. திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த அங்கித் குமார், தனது மனைவியின் தங்கையை மணக்க ஆசைப்பட்டுள்ளார். இதற்கு இடையூறாக இருந்த மனைவி கிரணை நண்பர் உதவியுடன் அவர் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளது. கண்ணை மறைத்த ஆசையால் அங்கித் கம்பி எண்ணுகிறார்.

Similar News

News December 17, 2025

முன்பதிவிலேயே ₹100 கோடி அள்ளிய அவதார்!

image

வரும் 19-ம் தேதி ரிலீசாகவுள்ள ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: Fire and Ash’ படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதல் இரு பாகங்களும் மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்த நிலையில், இப்படத்தை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்து வருகின்றனர். உலகளவில் தற்போது வரை, இப்படம் முன்பதிவில் ₹100 கோடியும், இதில் இந்தியாவில் மட்டும் ₹10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

News December 17, 2025

மாணவன் உயிரிழப்பு குறித்து அமைச்சர் விளக்கம்

image

<<18580609>>திருவள்ளூர்<<>> பள்ளி மாணவன் உயிரிழப்பு தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கமளித்துள்ளார். அதில், பள்ளியில் அஜாக்கிரதையாக செயல்பட்டவர்கள் குற்றம் செய்ததாகத்தான் அர்த்தம் என்று குறிப்பிட்டுள்ளார். FIR பதிவு செய்துள்ளதாக கூறிய அவர், நிதியுதவி மட்டுமின்றி குடும்பத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்தார். CM இதுபற்றி விசாரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

News December 17, 2025

520 பெண்களுடன் கணவர்.. மனைவியின் விநோத செயல்!

image

ஜப்பான் பெண்ணுக்கு, அரிய வகை நோயுடன் மகன் பிறக்க, கணவன் துணையுடன் அதை வெல்ல நினைக்கிறார். அப்போது தான், கணவர் 520 பெண்களுடன் முறை தவறி பழகி வருவது தெரியவருகிறது. முதலில் பழிவாங்க எண்ணினாலும், மகனின் நிலை கண்டு நூதன முடிவை எடுத்தார். கணவனை பிரிந்து, அவரின் முறையற்ற உறவுகளை Comics புக்காக வெளியிட்டுள்ளார். இதன்மூலம் கோபத்தை தணித்து கொண்டது மட்டுமின்றி, மகன் சிகிச்சைக்கும் பணம் சேர்த்துள்ளார்.

error: Content is protected !!