News July 15, 2024
மக்களுக்கு பேரதிர்ச்சி பரிசு: இபிஎஸ்

மின் கட்டணத்தை உயர்த்தியுள்ள திமுக அரசை கண்டிப்பதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மக்களவைத் தேர்தலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் ஓயட்டும் என்று காத்திருந்து மக்களுக்கு பேரதிர்ச்சியை பரிசளித்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மக்களை பெரும் சுமைக்கு ஆளாக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News November 23, 2025
₹105 கோடி.. தமிழ் சினிமாவில் வரலாறு படைத்த ‘ஜனநாயகன்’

‘ஜனநாயகன்’ படத்தின் தியேட்டர் உரிமம், 5 விநியோகஸ்தர்களுக்கு பிரித்து விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மொத்தம் ₹105 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகவும், தமிழ் சினிமா வரலாற்றில், ஒரு படத்தின் தியேட்டர் உரிமம் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்கப்படுவது இதுவே முதல்முறை என்றும் சினிமா வட்டாரங்கள் ஆச்சரியத்துடன் தெரிவிக்கின்றன. இது விஜய்யின் கடைசி படம் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
News November 23, 2025
பிங்க் டால்பின் பற்றி தெரியுமா?

அமேசான் நதியின் ஆழத்தில் நீந்தி திரியும் ஒரு அதிசயம் தான் பிங்க் டால்பின். இது ‘போட்டோ’ என்றும் அழைக்கப்படுகிறது. பிறக்கும்போது சாம்பல் நிறத்தில் உள்ள இவை, வளர வளர பிங்க் நிறமாக மாறுகின்றன. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், உற்சாகமடையும் போது இவை மேலும் பிரகாசமான பிங்க் நிறமாக மாறுமாம். மற்ற டால்பின்களை விட புத்தியசாலியானது என கூறும் நிபுணர்கள், இவை அழியும் நிலையில் உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
News November 23, 2025
மீண்டும் அதே தவறை செய்கிறாரா விஜய்?

கரூர் சம்பவத்திற்கு பொறுப்பேற்காமல், ஆளுங்கட்சி மீது பழிபோட்டார் என விஜய் மீது விமர்சனம் வைக்கப்பட்டது. இந்நிலையில், காஞ்சியில் மக்களுடனான சந்திப்பில் கரூர் சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய விஜய், ’என்னை ஏன் தொட்டோம், என் மக்களை ஏன் தொட்டோம்னு வருந்துவீங்க’ என பேசியிருக்கிறார். இதனால், மீண்டும் PUNCH வசனம் பேசி கரூர் மேட்டரில் ஆளும் தரப்பை அவர் கைகாட்டி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


