News March 20, 2024
மன்னிப்பு கேட்டார் ஷோபா கரந்த்லாஜே

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே சர்ச்சை கருத்தை பதிவிட்டார். இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் , உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில் ஷோபா, ‘என்னுடைய கருத்து தமிழர்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய முந்தைய கருத்தையும் திரும்ப பெறுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
Similar News
News April 21, 2025
ராசி பலன்கள் (21.04.2025)

➤மேஷம் – தாமதம் ➤ரிஷபம் – உதவி ➤மிதுனம் – மறதி ➤கடகம் – நஷ்டம் ➤சிம்மம் – பெருமை ➤கன்னி – முயற்சி➤துலாம் – ஆதாயம் ➤விருச்சிகம் – நன்மை ➤தனுசு – பயம் ➤மகரம் – பரிசு ➤கும்பம் – சினம் ➤மீனம் – பாராட்டு.
News April 21, 2025
நைஜீரியாவில் 56 விவசாயிகள் படுகொலை

நைஜீரியாவில் 56 விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெனியூ மாகாணத்தில் கால்நடை மேய்ப்பர்கள், விவசாயிகள் இடையே கடந்த சில நாள்களாக அடுத்தடுத்து மோதல்கள் நடந்த வண்ணம் உள்ளன. கிறிஸ்தவ மதத்தினர் விவசாய தொழிலிலும், கால்நடை மேய்க்கும் தொழிலில் இஸ்லாமியர்களும் ஈடுபட்டுள்ளனர். இருதரப்பினர் இடையே நடந்த மோதலில் 56 விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
News April 21, 2025
BREAKING: மும்பை அணியிடம் வீழ்ந்தது CSK

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை அணி 176 ரன்கள் எடுத்தது. ஜடேஜா(53), ஷிவம் துபே (50) அரைசதம் அடித்தனர். தொடந்து ஆடிய மும்பை அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. அரைசதம் அடித்த ரோஹித்(76) மற்றும் சூர்யகுமார் யாதவ்(68) அணியின் வெற்றியை உறுதி செய்தனர். சென்னை அணி 6-வது தோல்வியை சந்தித்ததால் ஃப்ளேஆஃப் செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது.