News March 18, 2025
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய ஷிண்டே

முகலாய மன்னன் அவுரங்கசீப்பை புகழ்பவர்கள் துரோகிகள் என்று மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசியிருப்பது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அமைந்துள்ளது. அவுரங்கபாத்தில் உள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அவர் இவ்வாறு பேசியிருக்கிறார். இந்த பிரச்னையை மையமாகக் கொண்டு நேற்று நாக்பூரில் கலவரம் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 19, 2025
TVK சார்பில் தண்ணீர் பந்தல்: விஜய் உத்தரவு

TVK சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்குமாறு நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். தங்கள் மாவட்டங்களில் உள்ள மாநகரம், நகரம், ஒன்றியம், வார்டு மற்றும் வட்டம் என அனைத்து இடங்களிலும் கட்சி நிர்வாகிகள் தண்ணீர் பந்தல் அமைக்க பரிந்துரைத்துள்ளார். மேலும், தாங்கள் அமைத்த தண்ணீர் பந்தலில் தண்ணீர் உள்ளதா? என தினந்தோறும் தவறாமல் கவனிக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
News March 19, 2025
நாட்டின் பணக்கார எம்எல்ஏ, ஏழை எம்எல்ஏ யார் தெரியுமா?

நாட்டின் பணக்கார எம்எல்ஏ, மும்பை காட்கோபார் (கிழக்கு) தொகுதி பாஜக எம்எல்ஏவான பராக் ஷா ஆவார். அவருக்கு ரூ.3,400 கோடி சொத்து இருப்பதாக ADR தெரிவித்துள்ளது. அவருக்கு அடுத்து, பணக்கார எம்எல்ஏ டி.கே. சிவக்குமார் (காங்.,), அவருக்கு ரூ.1,413 கோடி சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மே.வங்க பாஜக எம்எல்ஏ நிர்மல் குமாரே மிகவும் ஏழை எம்எல்ஏ, அவருக்கு ரூ.1,700 சொத்தே இருப்பதாக ADR கூறியுள்ளது.
News March 19, 2025
இன்னும் என்னென்ன செய்யப் போகுதோ AI!

AI-யின் வளர்ச்சி, ஒருபுறம் ஆச்சரியத்தை தந்தாலும் மறுபுறம் பயத்தையும் சேர்த்தே தருகிறது. அப்படியொரு சம்பவத்தைதான் AI தற்போது செய்திருக்கிறது. இத்தாலியின் பிரபலமான IL FOGILO நாளிதழின் ஒருநாள் செய்தித்தாளையே AI தயாரித்து கொடுத்துவிட்டது. இதைதான் அந்நிறுவனம் நேற்று விற்பனை செய்துள்ளது. ஹெட்லைன்ஸ், தலையங்கம், செய்திகள் என 100 ஜர்னலிஸ்டுகளின் வேலையை அசால்ட்டாக செய்து முடித்திருக்கிறது AI.