News March 16, 2024

அனுதாப ராணி என அழைத்தார்கள்

image

“அனுதாப ராணி” என மக்கள் தன்னை அழைத்ததாக நடிகை சமந்தா கூறியுள்ளார். மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டபோது, அதுகுறித்து பொதுவெளியில் பகிர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக கூறிய அவர், நோயின் தாக்கத்தால் சினிமா வாழ்க்கையில் உச்சத்தில் இருந்தும், தன்னால் அதை அனுபவிக்க முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து சமந்தா விரைவில் மீண்டுவர வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர்.

Similar News

News October 20, 2025

BREAKING: விலை மளமளவென குறைந்தது

image

கார் வாங்க பிளான் பண்ணுறீங்களா? இதுதான் சரியான நேரம். தீபாவளியையொட்டி முன்னணி கம்பெனிகள் விலையை குறைத்துள்ளன. டாடா தனது டிகோர் செடான் காருக்கு ₹30,000 வரை தள்ளுபடி கொடுக்கிறது. ஹூண்டாய் ஆரா ₹43,000 வரையும், ஹோண்டா அமேஸ் புதிய மாடலுக்கு ₹68,000, பழைய மாடலுக்கு ₹98,000 வரையும் சலுகை வழங்கப்படுகிறது. மேலும், வோக்ஸ்வேகன் விர்டஸ் ₹1.50 லட்சம், ஸ்கோடா ஸ்லாவியாவுக்கு ₹2.25 லட்சம் குறைகிறது. SHARE

News October 20, 2025

உலகின் ஆபத்தான வேலைகள் இவை தான்..

image

‘அதுவா சரியாயிட்டா பரவால்ல, இல்லைனா கடல்ல இறங்கி கப்பல தள்ளனும்’ என்ற வசனம் சிரிப்பை கொடுத்திருக்கலாம். ஆனால், தன் உயிருக்கு உத்தரவாதம் இல்லையென தெரிந்தும் சில ஆபத்தான வேலைகளை செய்கிறோம். இதற்கு பொருளாதார நிலை உள்பட பல காரணங்கள் இருந்தாலும், உயிரின் மதிப்பு விலைமதிப்பற்றதே. உலகின் டாப் 10 ஆபத்தான பணிகளை மேலே swipe செய்து பாருங்கள். ஆபத்தான வேலை என நீங்கள் நினைப்பதை கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News October 20, 2025

ஆறின கஞ்சி பழங்கஞ்சி: விஜய் பற்றி துரைமுருகன் பேச்சு

image

விஜய் வீட்டுக்குள்ளேயே இருப்பது, அவருக்கு எந்த அளவு அரசியலில் பலனளிக்கும் என்பது தெரியவில்லை என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். ‘ஆறின கஞ்சி பழங்கஞ்சி’ என்பதை போல், கரூர் துயரத்தை மக்களும் மறந்த பின்பு, விஜய் செல்வது எந்த அளவு சரியாக இருக்கும் என்பதும் கேள்விக்குறி தான் என்றார். மேலும். ஒரு கட்சியை நடத்தும் தலைவருக்கு முகத்தில் மட்டுமல்ல, உடல் முழுவதும் கண்கள் இருக்க வேண்டும் என கூறினார்.

error: Content is protected !!