News March 16, 2024
அனுதாப ராணி என அழைத்தார்கள்

“அனுதாப ராணி” என மக்கள் தன்னை அழைத்ததாக நடிகை சமந்தா கூறியுள்ளார். மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டபோது, அதுகுறித்து பொதுவெளியில் பகிர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக கூறிய அவர், நோயின் தாக்கத்தால் சினிமா வாழ்க்கையில் உச்சத்தில் இருந்தும், தன்னால் அதை அனுபவிக்க முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து சமந்தா விரைவில் மீண்டுவர வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர்.
Similar News
News January 8, 2026
புன்னகை பூவாக மலரும் மிருணாள் தாகூர்!

‘சீதா ராமம்’ என்ற ஒற்றை படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மிருணாள் தாகூர் மாறினார்.
அதுமட்டுமல்ல ஒரு தமிழ் படத்தில் கூட நடித்ததில்லை என்றாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் கனவுக்கன்னியாக வாழ்ந்து கொண்டிருப்பவர் மிருணாள். தனது சிரிப்பு மற்றும் கண்கள் செய்யும் மாயஜாலத்தால் அனைவரும் கவரும் அவர், இன்ஸ்டாவில் தனது லேட்டஸ்ட் போட்டோஸை பகிர்ந்துள்ளார். அதை மேலே Swipe செய்து அதை பாருங்க.
News January 8, 2026
8 போர்களை நிறுத்தியும் நோபல் பரிசு இல்லை: டிரம்ப்

அமைதிக்கான நோபல் பரிசு வழங்காததற்காக நார்வே மீது தனது கோபத்தை டிரம்ப் வெளிப்படுத்தினார். தனியாக 8 போர்களை நிறுத்திய தன்னை, NATO உறுப்பினரான நார்வே நோபல் பரிசுக்கு பரிந்துரைக்காதது முட்டாள்தனமான செயல் என சாடினார். ஆனால், நோபல் தனக்கு ஒரு பொருட்டல்ல என்றும் பல கோடி உயிர்களைக் காப்பாற்றியதே போதும் எனவும் குறிப்பிட்டார். US இல்லை என்றால் NATO மீது சீனா, ரஷ்யாவுக்கு பயம் இருக்காது எனவும் கூறினார்.
News January 8, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 574
▶குறள்:
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.
▶பொருள்: வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன் உண்டு?


