News March 16, 2024

அனுதாப ராணி என அழைத்தார்கள்

image

“அனுதாப ராணி” என மக்கள் தன்னை அழைத்ததாக நடிகை சமந்தா கூறியுள்ளார். மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டபோது, அதுகுறித்து பொதுவெளியில் பகிர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக கூறிய அவர், நோயின் தாக்கத்தால் சினிமா வாழ்க்கையில் உச்சத்தில் இருந்தும், தன்னால் அதை அனுபவிக்க முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து சமந்தா விரைவில் மீண்டுவர வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர்.

Similar News

News November 28, 2025

‘டிட்வா’ எதிரொலி: காய்ச்சல் முகாம்களுக்கு உத்தரவு

image

டிட்வா புயல் எதிரொலியாக ஹாஸ்பிடல்களில் டாக்டர்கள் முழு நேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் மா.சு., தெரிவித்துள்ளார். மழைக்கு பின் காய்ச்சல் முகாம்கள் நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஹாஸ்பிடல்களில் மின்சாரம் தடைபடாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், ஹாஸ்பிடல் அருகே மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

News November 28, 2025

பைசன் படத்தை புகழ்ந்த கிரிக்கெட்டர் DK

image

பைசன் திரைப்படம் அருமையாக இருப்பதாக கிரிக்கெட்டர் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார். மாரி செல்வராஜின் படங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இதில் தத்ரூபமாக நடிக்க துருவ் கடுமையான உழைப்பை போட்டிருப்பது தெரிவதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும், மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்திருந்ததாக கூறிய அவர், படக்குழுவுக்கு தன்னுடைய வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.

News November 28, 2025

நடிகர் சிவகுமாருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய CM ஸ்டாலின்

image

ஜெ.ஜெயலலிதா கவின் கலை பல்கலை.,-யின் 3-வது பட்டமளிப்பு விழாவில் CM ஸ்டாலின் பங்கேற்று பட்டங்களை வழங்கினார். இதில், வாழ்நாள் சாதனைக்காக நடிகர் சிவக்குமாருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. விழாவில் பேசிய CM, ஒரு கலைஞனாகவே பட்டம் வழங்க வந்துள்ளதாக தெரிவித்தார். சிவகுமார் தனக்கு சகோதரர் போன்றவர் எனக்கூறிய CM, ஜெ., பல்கலை.,-க்கு ₹5 கோடி மானியத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

error: Content is protected !!