News March 16, 2024
அனுதாப ராணி என அழைத்தார்கள்

“அனுதாப ராணி” என மக்கள் தன்னை அழைத்ததாக நடிகை சமந்தா கூறியுள்ளார். மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டபோது, அதுகுறித்து பொதுவெளியில் பகிர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக கூறிய அவர், நோயின் தாக்கத்தால் சினிமா வாழ்க்கையில் உச்சத்தில் இருந்தும், தன்னால் அதை அனுபவிக்க முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து சமந்தா விரைவில் மீண்டுவர வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர்.
Similar News
News November 20, 2025
CBSE பள்ளிகளுக்கு பறந்தது எச்சரிக்கை

CBSE 10, +2 மாணவர்களுக்கான பிராக்டிக்கல் தேர்வுகள், புராஜெக்ட் அசெஸ்மெண்ட் முடிந்தவுடன் மதிப்பெண்களை இணையதளத்தில் கவனமுடன் பதிவேற்றுமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிழைகள் இல்லாமல் மதிப்பெண்களை பதிவேற்ற வேண்டும் என்றும், பிழைகளை திருத்துவதற்குப் பின்னர் சாக்குப்போக்கு சொல்லக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2026 ஜன.1 முதல் பிப்.14 வரை பிராக்டிக்கல் தேர்வுகள் நடைபெற உள்ளன.
News November 20, 2025
புதிய ஓய்வூதிய திட்டமே சிறப்பாக உள்ளது: TN அரசு

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிய பொது நல மனு மீதான விசாரணையில், புதிய ஓய்வூதிய திட்டமே சிறப்பாக செயல்படுவதாக தமிழக அரசு மதுரை HC-ல் பதிலளித்துள்ளது. ஏற்கெனவே, பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு இடைக்கால அறிக்கையை மட்டுமே தாக்கல் செய்திருந்தது. இதனிடையே, டிசம்பருக்குள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஜாக்டோ ஜியா அமைப்பு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
News November 20, 2025
பிரபல நடிகை பிரதியுஷா மரணம்.. பரபரப்பு தகவல்

தவசி, மனுநீதி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை பிரதியுஷாவின் மரணம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. காதலன் சித்தார்த் உடன் 2002-ல் விஷம் குடித்து அவர் உயிரிழந்தார். ஆனால், காதலன் உயிர்பிழைத்தார். இதுதொடர்பான SC வழக்கில், தான் குற்றமற்றவர் என சித்தார்த் வாதிட்டார். ஆனால், தனது மகளை தற்கொலைக்கு தூண்டியதே அவர்தான் என பிரதியுஷாவின் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால், வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.


