News May 2, 2024
மே.வங்க ஆளுநர் மீது பாலியல் குற்றச்சாட்டு

மேற்குவங்க ஆளுநர் ஆனந்த போஸ், பெண் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆளுநர் மாளிகைக்குச் சென்ற பெண்ணிடம் அவர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகத் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சகாரிகா கோஸ் தனது எக்ஸ் பக்கப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். காவல்நிலையத்தில் புகார் அளிக்க அந்தப் பெண் அழைத்துச் செல்லப்பட்டு இருப்பதாகவும் அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளார்.
Similar News
News January 30, 2026
ரஷ்யா செல்கிறாரா ஜெலன்ஸ்கி?

அமைதிப் பேச்சுவார்த்தைக்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ரஷ்யா மீண்டும் மாஸ்கோவிற்கு அழைத்துள்ளது. இருப்பினும், அவரிடமிருந்து இதுவரை எவ்வித பதிலும் வரவில்லை என்று ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டும் ரஷ்யா விடுத்த அழைப்பை ஜெலன்ஸ்கி நிராகரித்திருந்தார். மேலும், தனது நாட்டின் மீது ஏவுகணைகளை வீசும் நாட்டிற்கு தான் செல்லமாட்டேன் என்றும் கூறியிருந்தார்.
News January 30, 2026
ராசி பலன்கள் (30.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News January 30, 2026
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சிவகாசியில் ரிக்டர் அளவுகோலில் 3-ஆக நிலநடுக்கம் பதிவான நிலையில், அதன் தாக்கம் சுமார் 20 கிமீ வரை உணரப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில், செங்குளம், பாட்டாக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, மக்கள் சாலையில் தஞ்சம் புகுந்தனர்


