News December 5, 2024

கழிவு நீர் கலக்கவில்லை: அமைச்சர் மறுப்பு

image

சென்னை தாம்பரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை என அமைச்சர் தா.மோ.அன்பரசன் விளக்கம் அளித்துள்ளார். கழிவுநீர் கலந்திருந்தால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருப்பர் எனவும், உணவுப் பொருளில் கலப்படம் நிகழ்ந்ததாலேயே உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதால் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், மெத்தனப் போக்குடன் அரசு செயல்பட்டதாகவும் EPS குற்றஞ்சாட்டியிருந்தார்.

Similar News

News December 6, 2025

தவெகவில் இணைந்தவுடன்.. விஜய் போட்ட உத்தரவு

image

நேற்று தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்தை, தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய விஜய் அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து, நாஞ்சில் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவிலான பொதுக்கூட்டங்களை நடத்த தவெக மாவட்ட செயலாளர்கள் முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. பொதுக்கூட்டங்களில் தவெக கொள்கை, விஜய் வெற்றிபெற்றால் மக்களுக்கு என்னென்ன செய்வார், திமுக ஆட்சியில் உள்ள குறைபாடுகள் குறித்து அவர் பேசவிருக்கிறாராம்.

News December 6, 2025

இண்டிகோ மீது நடவடிக்கை எடுப்போம்: அமைச்சர்

image

இண்டிகோ பிரச்னை விரைவில் சீராகும் என விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் தெரிவித்துள்ளார். விமான பணி நேர வரம்பு விதிகளால்தான் இந்த இன்னல்கள் நேர்ந்ததாக கூறப்படுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், மற்ற விமான நிறுவனங்கள் சரியாகத்தானே இயங்குகிறது என கூறியுள்ளார். மேலும் இதற்கு இண்டிகோ தான் காரணம் என்ற அவர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

News December 6, 2025

உணவு விஷயத்தில் இந்த தவறு வேண்டாம்.. ஆபத்து!

image

நார்ச்சத்து, புரதம் இருக்கும் உணவுகளை சாப்பிட்டாலும் சோர்வாகவே உணர்கிறீர்களா? இதற்கு நீங்கள் சாப்பிடும் முறை காரணமாக இருக்கலாம். உணவை வேக வேகமாக மென்று விழுங்காதீங்க. இப்படி செய்தால் உணவில் உள்ள சத்துக்கள் உடலில் சேராது. அத்துடன் சுகர், இதய பிரச்னை, அஜீரணம் போன்ற பிரச்னைகளும் ஏற்படும். இதனால் எவ்வளவு நல்ல உணவை சாப்பிட்டாலும் பிரயோஜனம் இல்லை. எனவே, உணவை பொறுமையாக மென்று சாப்பிடுங்கள். SHARE.

error: Content is protected !!