News December 5, 2024
கழிவு நீர் கலக்கவில்லை: அமைச்சர் மறுப்பு

சென்னை தாம்பரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை என அமைச்சர் தா.மோ.அன்பரசன் விளக்கம் அளித்துள்ளார். கழிவுநீர் கலந்திருந்தால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருப்பர் எனவும், உணவுப் பொருளில் கலப்படம் நிகழ்ந்ததாலேயே உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதால் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், மெத்தனப் போக்குடன் அரசு செயல்பட்டதாகவும் EPS குற்றஞ்சாட்டியிருந்தார்.
Similar News
News September 18, 2025
கவினை ஆணவக்கொலையை குடும்பமே திட்டமிட்டது: CB-CID

கவின் ஆணவக்கொலையில் காதலியின் தந்தைக்கும் தொடர்பு இருப்பதாக கோர்ட்டில் CB-CID தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கவினை சுர்ஜித் கொலை செய்தது தனது பெற்றோருக்கு தெரியாது என பெண் கூறியிருந்தார். ஆனால் தற்போது, சுபாஷினியின் காதல் குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை என்பதால் கவினை கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டதாக CB-CID கூறியதால், பெண்ணின் தந்தை SI சரவணனின் ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்டது.
News September 18, 2025
BREAKING: மீண்டும் கூட்டணியில் TTV, OPS.. இபிஎஸ் சம்மதம்

அமித்ஷா – EPS சந்திப்பு குறித்து புதிய பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆம்! NDA கூட்டணியில் மட்டும் TTV, OPS, சசிகலாவை சேர்க்க EPS சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்மாவட்டங்களில் கூட்டணியின் பலத்தை அதிகரிக்க வேண்டும் என அமித்ஷா கூறியதை அடுத்து, EPS ஓகே சொல்லி இருக்கிறாராம். இதனால், பாஜக தேசிய தலைமை மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என கூறப்படுகிறது.
News September 18, 2025
முகம் பளிச்சிட இந்த தேநீரை குடிங்க!

ரோஜா இதழ்களை பறித்து, நன்கு உலர்த்தி கொள்ளவும் *உலர்ந்த இந்த ரோஜா இதழ்களை, கொதிக்கும் நீரில் சேர்த்து கொள்ளவும் *3- 5 நிமிடங்கள் வரை இந்த நீரை கொதிக்க வைத்துவிட்டு, இறக்கி வடிகட்டவும் *பிறகு இதில், தேயிலைத் தூளைச் சேர்க்கவும் *இதில் தேன் கலந்தால், சுவையான, ஹெல்தியான ரோஸ் டீ ரெடி. இதனை உங்களின் நண்பர்களுக்கும் பகிரவும்.