News March 27, 2025

10 மாவட்டங்களுக்கு கடும் வெயில் எச்சரிக்கை!

image

வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு, சேலம், விருதுநகர் மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என கூறியுள்ள அவர், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News March 30, 2025

உலகில் அதிக மது அருந்தும் நாடுகள்

image

உலகிலேயே மால்டோவா என்ற நாட்டில்தான் மக்கள் அதிகம் மது அருந்துவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நாட்டில், குடிமகன் ஒருவர் சராசரியாக ஓராண்டுக்கு 500 பாட்டில் பீர் குடிக்கிறாராம். இந்தப் பட்டியலில் இரண்டாவது, மூன்றாவது இடத்தில் லிதுவேனியா, செக் குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா இதில் 103ஆவது இடத்தில் உள்ளது. இஸ்லாமிய நாடுகள் கடைசி இடங்களில் உள்ளன.

News March 30, 2025

விஜய்யின் முடிவுக்கு சீமான் வரவேற்பு

image

தனித்து களம் கண்டு திமுகவை வீழ்த்துவோம் என்ற விஜய்யின் முடிவினை வரவேற்பதாக சீமான் தெரிவித்துள்ளார். விஜய் கட்சி தொடங்கியபோது, அவர் சீமானுடன் கூட்டணி சேருவார் என்று சொல்லப்பட்டது. நாளடைவில், அது பொய்த்துப் போகவே, விஜய் தனித்து தேர்தலை காணவிருக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. தவெக, நாதக இரு கட்சிகளும் தனித்து களம் காண்பது யாருக்கு லாபம்?

News March 30, 2025

ஆசிரியர்களை அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவு

image

பொதுத் தேர்வு பணிக்கு ஆசிரியர்களை அனுப்பவில்லையேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகளை தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. தேர்வு பணிகளில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுவர். ஆனால் சில மாவட்டங்களில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனுப்பப்படுவதில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

error: Content is protected !!