News April 29, 2025
வெளி மாநிலத்தவர்களுக்கு தனி ID கார்டு: அமைச்சர்

தமிழ்நாட்டில் பணியாற்றும் வடமாநிலத்தவர் எண்ணிக்கை குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடமாநிலத்தவர் வருகை அதிகரித்து வருவதாகவும், வடகிழக்கு மாநிலங்களில் இருப்பது போல, கண்காணிக்கும் முறையை கொண்டு வர வேண்டும் எனவும் சட்டப்பேரவையில் வேல்முருகன் MLA கோரிக்கை விடுத்தார். அதற்கு, ID கார்டு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் பதிலளித்தார்.
Similar News
News November 28, 2025
விஜய் கட்சியில் ஜெயக்குமார் இணைகிறாரா?.. அறிவித்தார்

செங்கோட்டையனைத் தொடர்ந்து அதிமுகவின் முக்கிய முகமான ஜெயக்குமாரும் தவெகவில் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதற்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயக்குமார், மூச்சு உள்ளவரை அதிமுகவில்தான் இருப்பேன் எனவும், உயிர் போனாலும் தன் மீது அதிமுக கொடிதான் போர்த்தப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
News November 28, 2025
எயிட்ஸுக்கு தடுப்பூசி… விரைவில் இந்தியாவில்!

100% செயல்திறன் கொண்ட எயிட்ஸ்(HIV) தடுப்பூசி இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. USA-வின் கிலீட் சயன்சஸ் நிறுவனத்தின் இந்த தடுப்பூசி, FDA அங்கீகாரம் பெற்றுவிட்டது. இந்நிலையில் அதன் உரிமம் பெற்று இந்தியாவில் lenacapavir என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு விற்கப்படவுள்ளது. ஆண்டுக்கு 2 முறை இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் போதும். HIV தொற்று தாக்கும் ரிஸ்க் அதிகம் உள்ளவர்களுக்கு இது சிறந்த தீர்வாக அமையும்.
News November 28, 2025
இதெல்லாம் கூடிய சீக்கிரமே நடக்கப்போகுது..

தற்போது சாத்தியமில்லை எனக் கூறப்படும் இந்த விஷயங்கள் வருங்காலத்தில் சாத்தியமாகலாம். ➤ரூபாய் நோட்டுகள் பயன்பாடே இல்லாமல் போகலாம் ➤மனிதர்கள் 100 வயதை கடந்தும் வாழ்வர் ➤பலரின் நெருங்கிய நண்பனாக AI இருக்கும் ➤போனின் சார்ஜ் பல ஆண்டுகள் நீடிக்கலாம் ➤Mars-ல் மனிதர்கள் நடமாடலாம் ➤வீட்டுக்கு ஒரு ரோபோ இருக்கும் ➤வின்வெளியில் டூர் அடிப்பது சாதாரணமாகிவிடும். இதில் எதை பார்க்க நீங்கள் ஆவலுடன் இருக்கீங்க?


