News January 20, 2025
வேட்புமனுவை வாபஸ் பெற்றார் செந்தில் முருகன்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன் ஈரோடு கிழக்குத் தொகுதியில் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். அதிமுக போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துவிட்டதால், செந்தில் முருகன் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அதனை ஏற்காத கட்சித் தலைமை, அவரை நீக்கியது. இந்நிலையில், வேட்புமனுவை அவர் இன்று வாபஸ் பெற்றார். இதனால், கட்சியில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News March 10, 2026
+2 வினாத்தாளில் Album song.. விளக்கம் தந்த CBSE

+2 கணித தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாளின் QR Code-ல் <<19344031>>யூடியூபில் உள்ள ஆல்பம் பாடல்<<>> ப்ளே ஆனதாக சர்ச்சை வெடித்த நிலையில் அதுகுறித்து CBSE விளக்கமளித்தது. வினாத்தாள் சரியாக இருந்ததாகவும், தேர்வின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
News March 10, 2026
சிலிண்டர் தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுங்க: EPS

உரிய நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என்று மத்திய அரசை EPS வலியுறுத்தியுள்ளார். அதேபோல், மக்களிடையே தேவையற்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் வேலைகளை விடுத்து, TN-ல் உணவகங்கள் இயங்குவதற்கான எரிவாயு ஏற்பாடுகள், சலுகைகளை மாநில அரசு செய்து தரவும் வலியுறுத்தினார். மேலும், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அம்மா உணவகங்களை முழுவீச்சில் இயங்க வைக்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
News March 10, 2026
❤️ 64 அபார்ட்மெண்ட்களை கொடுத்து உதவிய தொழிலதிபர்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தினால் துபாயில் சிக்கி தவிக்கும் இந்தியர்களுக்கு இந்திய தொழிலதிபர் யோகேஷ் தோஷி உதவி செய்துள்ளார். ஹோட்டல் முன்பதிவுகள் முடிந்ததால் தங்க இடமின்றி தவித்த 125 பயணிகளுக்கு தனது 64 அபார்ட்மெண்ட்களை ஒதுக்கியுள்ளார். அவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் மருத்துவ வசதிகளை இலவசமாக வழங்கியுள்ளார். மனிதாபிமானத்துடன் செயல்பட்ட அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.


