News April 27, 2025

செந்தில் பாலாஜி இலாகாக்கள், இனி இவர்கள் வசம்?

image

கோவையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில் உதயநிதி பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சிகளே அமைச்சராக <<16230061>>செந்தில் பாலாஜி <<>>பங்கேற்கும் கடைசி நிகழ்ச்சி எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்வார் என்றும், அவர் வசமுள்ள மின்சாரத்துறை தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு, ஆயத்தீர்வை இலாகா முத்துசாமிக்கும் கூடுதலாக அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News November 15, 2025

திங்கள்கிழமை இந்த மாவட்டங்களில் விடுமுறையா?

image

நாளை, நாளை மறுநாள் (திங்கள்) கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரத்தில் கனமழையும், சென்னையில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. நவ.18-ல் காவிரி படுகை மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் மிக கனமழையும் தொடரும் எனவும் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், திங்கள்கிழமை அலர்ட் கொடுக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 15, 2025

இன்னும் சற்று நேரத்தில் ராகுல் காந்தி ஆலோசனை

image

பிஹார் தேர்தலில் 61 இடங்களில் போட்டியிட்ட காங்., 6 இடங்களில் மட்டுமே வென்றது. தேசிய கட்சியான காங்.,கிற்கு இது பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் தொடர்பாக, கட்சியின் மூத்த தலைவர்களுடன், மதியம் 12:00 மணிக்கு ராகுல் காந்தி ஆலோசனை நடத்தவுள்ளார். தொடர் தோல்விகள் தொடர்பாகவும், கட்சியின் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.

News November 15, 2025

கஞ்சா கேள்வி: ‘இட்லி, தோசை’ என நயினார் பதில்!

image

தமிழகத்தில் கிராமங்களிலும் கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருவதாக நயினார் நாகேந்திரன் பேட்டியளித்தார். அப்போது இடைமறித்த செய்தியாளர், ‘குஜராத்தில் அதிக கஞ்சா பிடிபட்டுள்ளதே?’ என கேட்க, சற்று பின்வாங்கிய நயினார், ‘முதலில் இட்லி, தோசை சாப்பிடுங்கள், அப்புறம் சப்பாத்தி சாப்பிடுங்கள்’ என்றார். அதாவது, முதலில் தமிழகத்தை கவனியுங்கள், பிறகு குஜராத்தை பற்றி பேசலாம் எனக்கூறி, சந்திப்பை முடித்து கொண்டார்.

error: Content is protected !!