News August 2, 2024
செந்தில் பாலாஜிக்கு வாந்தி, மயக்கம்

செந்தில் பாலாஜிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவதிப்படுவதாக, புழல் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணைக்காக காணொலி காட்சி மூலம், படுத்த படுக்கையாக அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதுகுறித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி கேள்வி எழுப்பியபோது, அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், புழல் சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் சிறை நிர்வாகம் தெரிவித்தது.
Similar News
News December 4, 2025
BREAKING திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றம் வழக்கில், மதுரை காவல் ஆணையர் ஆஜராகி விளக்கமளித்த நிலையில், மனுதாரர் தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். தீபம் ஏற்றும் மனுதாரர் தரப்புக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் காவல் ஆணையர் லோகநாதனுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளளார். திருப்பரங்குன்றத்தில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவையும் நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
News December 4, 2025
இந்தியா இதை செய்தாக வேண்டும்: ரஷ்ய MLA

S-500 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்க, ரஷ்ய அதிபர் புடினிடம் இந்தியா ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என பாட்னாவில் பிறந்த ரஷ்ய MLA-வான அபே சிங் வலியுறுத்தியுள்ளார். இது போன்ற அமைப்பு சீனாவிடம் கூட இல்லை எனவும், வேறு நாடுகளுக்கு விற்காமல் ரஷ்யா மட்டுமே பயன்படுத்தும் இந்த அமைப்பை இந்தியா பெற்றால், மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ரஷ்யாவின் குருஸ்க் பகுதி MLA-ஆக அபே சிங் உள்ளார்.
News December 4, 2025
RO-KO விவகாரம்.. கம்பீர், அகர்கரை சாடிய ஹர்பஜன்

RO-KO மற்றும் கம்பீர், அகர்கர் இடையே உறவு மோசமாகி வரும் நிலையில், ஹர்பஜன் சிங் கூறிய கருத்து பேசுபொருளாகியுள்ளது. தங்களது கிரிக்கெட் கரியரில் போதிய சாதனைகளை படைக்காத தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், பல சாதனைகளை படைத்துள்ள RO-KOவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், தான் உள்பட கடந்த காலங்களில் பல வீரர்களும் இதுபோன்ற அனுபவங்களை சந்தித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


