News March 18, 2024
ஜாமின் கோரி செந்தில் பாலாஜி மீண்டும் மனுத் தாக்கல்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜுன் 14இல் அவர் கைது செய்யப்பட்டார். பல முறை அவர் ஜாமின் கோரி நீதிமன்றங்களில் மனுத் தாக்கல்
செய்திருந்த நிலையில், அவரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மக்களவை தேர்தல் பரப்புரை தீவிரமடைய உள்ள நிலையில், தற்போது 2ஆவது முறையாக அவர் உச்சநீதிமன்றம் சென்றுள்ளார்.
Similar News
News January 21, 2026
தங்கம் விலை தடாலடியாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளியின் விலை இன்றும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $106.00 உயர்ந்து $4,784.53-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ்-க்கு $0.75 உயர்ந்து $95.33 ஆக உள்ளது. இதனால், இன்று (ஜன.21) இந்திய சந்தையில் தங்கம் விலை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 21, 2026
இன்று மாலை தவெக பிரசாரக் குழு கூட்டம்

பனையூர் தவெக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் பிரசாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. பேரவை தேர்தலை முன்னிட்டு, மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
News January 21, 2026
காங்., செயற்குழு கூட்டத்தில் MP-க்கள் பங்கேற்காதது ஏன்?

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது. இதில், ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, கிருஷ்ணசாமி, மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, விஜய் வசந்த் உள்ளிட்ட 7 MP-க்கள் பங்கேற்கவில்லை. இதனால் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், அவர்கள் டெல்லியில் இருப்பதால் பங்கேற்க முடியவில்லை என்று தமிழக பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் கூறினார்.


