News May 15, 2024
செந்தில் பாலாஜி வழக்கு நாளை ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையில், 330 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதாகவும், முதல்கட்டமாக இடைக்கால ஜாமின் வழங்குமாறு செந்தில் பாலாஜி தரப்பில் கோரப்பட்டது. அமலாக்கத்துறை கால தாமதப்படுத்தவே அவகாசம் கோருவதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
Similar News
News August 8, 2025
கர்ப்பிணி என்று தெரிந்தும் இறக்கம் இல்லை: ராதிகா

கர்ப்பமாக இருந்த போது ஷூட்டிங்கில் எதிர்கொண்ட வலிகளை நடிகை ராதிகா ஆப்தே பகிர்ந்துள்ளார். ஒரு பாலிவுட் படத்தில் நடித்த போது தான் கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்ட அப்படத்தின் தயாரிப்பாளர், மிகவும் இறுக்கமான ஆடைகளை அணிய சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும், டாக்டர்களை பார்க்கக்கூட அனுமதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளாா். மேலும், அந்த வலியிலும் தன்னை படப்பிடிப்பில் ஈடுபடுத்தியதாகவும் கூறியுள்ளார்.
News August 8, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 8 – ஆடி 23 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: சதுர்தசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை.
News August 8, 2025
ஹாஸ்பிடலில் இந்திய அணி ஆல்ரவுண்டர்

இந்திய அணி வீரர் நிதிஷ்குமாருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஹாஸ்பிடலில் இருக்கும் புகைப்படத்தை நிதிஷ் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், அவர் சீக்கிரம் குணமடைய வாழ்த்தி வருகின்றனர். இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டிற்கு முன்பு ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது அவருக்கு முழங்காலில் அடிபட்டது. அதனால், தொடரை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.