News May 13, 2024

ஆந்திர தேர்தலில் வாக்களித்த சென்சு பழங்குடியினர்

image

ஆந்திராவில் இன்று மக்களவைத் தொகுதிகளுக்கும், மாநில சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதையொட்டி தேர்தல் ஆணையத்தால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நாகர்குர்னூலில் வாழும் சென்சு பழங்குடியின மக்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்குச் சாவடிகளை அவர்கள் வசிப்பிடம் அருகிலேயே தேர்தல் ஆணையம் அமைத்திருந்தது. அதனால் அவர்கள், அந்த சாவடிகளிலேயே வாக்களித்தனர்.

Similar News

News November 19, 2025

BREAKING: பதவியை பறித்தார் ஸ்டாலின்

image

கோவை மேற்கு திமுக ஒன்றிய செயலாளர் பி.வி.மகாலிங்கத்தின் பதவியை பறித்து, ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திமுகவில் இருந்து கொண்டே, அதிமுகவினருடன் மகாலிங்கம் தொடர்பில் இருந்துள்ளார். இன்று நடந்த ‘ஒன் டூ ஒன்’ சந்திப்பின்போது, இதுதொடர்பாக புகார் எழுந்த நிலையில், உடனே அவரின் கட்சிப் பதவியை, ஸ்டாலின் பறித்துள்ளார். மேலும், பதவி பறிப்பு நடவடிக்கை தொடரும் என்றும் திமுகவினரை எச்சரித்துள்ளார்.

News November 19, 2025

‘வாரணாசி’ டைட்டில் சர்ச்சை வெடித்தது

image

‘வாரணாசி’ டைட்டில் உரிமம் ராம பிரம்மா ஹனுமா கிரியேஷன்ஸ் பட நிறுவனத்திற்கு சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளது. ‘Vaaranasi’ என அந்த தயாரிப்பு நிறுவனம் பதிவு செய்துள்ள நிலையில், ராஜமௌலி ‘Varanasi’ என தனது படத்திற்கு பெயரிட்டுள்ளார். இந்த விவகாரம் பெரிதான நிலையில், சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்துடன் ராஜமௌலியும், படத்தின் தயாரிப்பாளரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

News November 19, 2025

மெட்ரோ விவகாரத்தில் பொய் பிரசாரம்: தமிழிசை

image

மதுரை, கோவை மெட்ரோ திட்ட விவகாரத்தில் பொய் பிரசாரம் செய்யப்படுவதாக தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார் . தமிழக அரசு தயாரித்து அனுப்பிய அறிக்கையில் தவறு இருப்பதால்தான் <<18322918>>விளக்கம்<<>> கேட்கப்பட்டுள்ளது. ஆனால், மெட்ரோ ரயில் வராது என்பதுபோல், ஆளும் கட்சியினர் தவறான தகவலை பரப்புகின்றனர் என சாடிய அவர், நேரடியாக PM-ஐ சந்தித்து மனு அளிக்க வாய்ப்புள்ளபோதும், CM ஸ்டாலின் ஏன் கடிதம் எழுதுகிறார் என கேள்வி எழுப்பினார்.

error: Content is protected !!