News April 10, 2024
10 ஆண்டுகளில் 75,000 ஆக உயர்ந்த சென்செக்ஸ்

38 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 100 அடிப்படை புள்ளிகளை வைத்து ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து படிப்படியாக உயர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டில் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற போது, 20,000ஆக இருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் உயர்ந்து, நேற்று வர்த்தக நேரத்தில் 75,000 புள்ளிகளை கடந்து 75,124ஆக இருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் 50,000 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
Similar News
News March 24, 2026
இந்தியா நோக்கி புறப்பட்ட அடுத்த 2 கப்பல்கள்

ஹார்முஸ் நீரிணையில் இருந்து அடுத்த 2 கப்பல்கள் இந்தியா நோக்கி புறப்பட்டுள்ளன. பைன் கேஸ் மற்றும் ஜக் வசந்த என்ற கப்பல்கள் 92,000 டன் LPG உடன் ஓரிரு நாள்களில் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே 3 இந்திய கப்பல்கள் வெற்றிக்கரமாக வந்தடைந்தன. மேலும், ஹார்முஸ் நீரிணையில் பல்வேறு நாடுகளை 500-க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது
News March 24, 2026
லெபனானில் தாக்குதல்.. வெளியேறும் மக்கள்

ஈரானுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியது. இதனை தொடர்ந்து, லெபனானையும் இஸ்ரேல் தாக்கி வருகிறது. இதனால், லெபனானில் தெற்கு பகுதியில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு உயிர்பிழைக்க தஞ்சம் தேடி குடும்பத்துடன் வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 5-ல் ஒரு பங்கு ஆகும்.
News March 24, 2026
புத்தர் பொன்மொழிகள்

▶உள்ளத்தில் கோபம் இருந்தால் மட்டுமே வெளியில் எதிரி இருக்க முடியும். ▶யாரிடம் குறைவான ஆசைகளும், மன அமைதியும் உள்ளதோ அவர்கள் கவலையின்றி வாழ்கிறார்கள். ▶வாழ்வில் நிலையான ஒரே விஷயம் மாற்றம் மட்டுமே என்பதை நினைவில்கொள்ளுங்கள். ▶அனைத்தும் நம் மனதின் பிரதிபலிப்பு என்பதால், நம் மனதால் அனைத்தையும் மாற்ற முடியும். ▶உங்கள் செயல்கள் மட்டுமே உங்களின் உண்மையான உடமைகள்.


