News April 10, 2024
10 ஆண்டுகளில் 75,000 ஆக உயர்ந்த சென்செக்ஸ்

38 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 100 அடிப்படை புள்ளிகளை வைத்து ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து படிப்படியாக உயர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டில் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற போது, 20,000ஆக இருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் உயர்ந்து, நேற்று வர்த்தக நேரத்தில் 75,000 புள்ளிகளை கடந்து 75,124ஆக இருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் 50,000 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
Similar News
News November 7, 2025
BREAKING: இலவச பட்டா… தமிழக அரசு புதிய அறிவிப்பு

TN-ல் முதல்முறையாக உபரி நிலத்தில் வீட்டுமனை பட்டா வழங்க CM ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ஒட்டன்சத்திரத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு உபரி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா தர அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முதல்கட்டமாக 500-க்கும் மேற்பட்டோர் பயனடைந்திருப்பதாகவும், இது TN முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
News November 7, 2025
₹4 லட்சம் ஜீவனாம்சம் போதாது: ஷமி EX மனைவி

ஷமி மாதாமாதம் கொடுக்கும் ₹4 லட்சம் ஜீவனாம்சத்தை உயர்த்தி கொடுக்க வலியுறுத்தி, அவரது EX மனைவி ஹசின் ஜஹான் SC-ல் மனுத்தாக்கல் செய்துள்ளார். கோடிகளில் சம்பாதிக்கும் ஷமி, சிறு தொகையையே ஜீவனாம்சமாக வழங்குவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை விசாரித்த கோர்ட், ₹4 லட்சம் பெரிய தொகை இல்லையா என கேள்வி எழுப்பினாலும், இது குறித்து விளக்கம் அளிக்க ஷமி, மே.வங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
News November 7, 2025
அதிமுக + விஜய் கூட்டணி… முடிவை அறிவித்தார்

விஜய்யுடன் கூட்டணி அமைப்பதில் அதிமுக உறுதியாக இருப்பதை RB உதயகுமார் மீண்டும் பதிவு செய்துள்ளார். எல்லா கட்சிகளும் அறிவிப்பது போல தவெகவும் CM வேட்பாளரை அறிவித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், மெகா கூட்டணியை EPS அமைப்பார் எனத் தெரிவித்துள்ளார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் RB உதயகுமார் சூசகமாக தெரிவித்துள்ளார். அதிமுகவின் மெகா கூட்டணியில் தவெக இடம்பெறுமா?


