News March 19, 2025
சென்செக்ஸ் 148 புள்ளிகள் உயர்வு

இந்தியப் பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் தொடர்ந்து 3 வது நாளாக ஏற்றத்துடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 148 புள்ளிகள் உயர்ந்து 75,449 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 73 புள்ளிகள் அதிகரித்து 22,907 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவடைந்து. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 31 பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகியுள்ளது.
Similar News
News September 19, 2025
நல்ல பண்பாளரை இழந்துவிட்டோம்: விஜய்

நடிகர் ரோபோ சங்கரின் இறப்பு செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது X பக்கத்தில், தனது நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தனி இடத்தை உருவாக்கிய சிறந்த பண்பாளரை இழந்துவாடும் குடும்பத்தினர், ரசிகர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். விஜய் உடன் இணைந்து ‘புலி’ படத்தில் ரோபோ சங்கர் நடித்திருந்தார்.
News September 19, 2025
காசா போருக்கு எதிரான தீர்மானத்தை ரத்து செய்த US

காசாவில் உடனடி போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கக் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 14 உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஆனால், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி மீண்டும் அதை ரத்து செய்துள்ளது. இந்தத் தீர்மானம் ஹமாஸை போதுமான அளவு கண்டிக்கவில்லை என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
News September 19, 2025
திமுகவில் இணைந்த அதிமுக தலைவர்கள்!

அதிமுகவில் அதிருப்தியில் உள்ள தலைவர்களை திமுக அடுத்தடுத்து இழுத்து வருகிறது. Ex அமைச்சர் அன்வர் ராஜா, Ex MP மைத்ரேயன் வரிசையில், ஜெயலலிதாவுக்கு அரசியல் உரை ஆசிரியராக இருந்த மருது அழகுராஜும் திமுகவில் இணைந்துள்ளது அக்கட்சியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதிமுகவிலிருந்து பலர் திமுகவில் இணைய உள்ளதாக மருது அழகுராஜ் குண்டு ஒன்றையும் வீசியுள்ளார். யார் யார் இணைய வாய்ப்புள்ளது?