News April 28, 2025

சென்செக்ஸ் 1,022 புள்ளிகள் உயர்வு

image

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,022 புள்ளிகள் உயர்ந்து 80,234 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 292 புள்ளிகள் உயர்ந்து 24,331 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், சன் பார்மா, நெஸ்லே ஆகியவை நிஃப்டியில் அதிக லாபம் பெற்றுள்ளன.

Similar News

News January 21, 2026

குடும்ப அட்டைகளுக்கு ₹3000.. தமிழக அரசு அறிவிப்பு

image

TN-ல் 96% பேருக்கு பரிசு தொகுப்பு கிடைத்த நிலையில், தொலைதூர நகரங்கள், வெளிமாநிலங்களில் வசிப்பவர்கள் என 4% பேருக்கு இந்த பரிசு தொகுப்பை பெற முடியாத சூழல் எழுந்திருக்கிறதாம். எனவே ₹3000 பணத்தை வங்கி கணக்கில் வரவு வைக்கவேண்டும் என அரசுக்கு கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், பொங்கல் பணத்தை வாங்காதவர்கள், ரேஷன் கடைக்கு சென்று வாங்கி கொள்ளலாம் என உணவு வழங்கல் துறை இயக்குநர் சிவராசு அறிவித்துள்ளார்.

News January 21, 2026

பணத்தை மிச்சப்படுத்தும் 50:30:20 ரூல்!

image

சம்பாதிப்பதை போல, பணத்தை எப்படி செலவு செய்கிறோம் என்பதிலும் கவனம் தேவை. இல்லையேல், திடீர் இன்னல் ஏற்படலாம். அதனால், பணத்தை 50:30:20 விதிப்படி பிரிப்பது நல்லது. அத்தியாவசிய தேவைக்கு 50% *விரும்பும் விஷயங்களுக்கு 30% *சேமிப்புகளுக்கு 20%. ஒரு ஃப்ரீ அட்வைஸ், ஒரு பொருளை வாங்க ஆசை வந்தால், உடனே கடைக்கு கிளம்ப வேண்டாம். அப்பொருள் தேவையா என ஒருநாள் பொறுமையாக யோசிங்க. உங்களுக்கே பதில் கிடைக்கும்.

News January 21, 2026

சனிக்கிழமை இந்த மாவட்டத்தில் பள்ளிகள் உண்டு

image

கடந்த 2 மாதங்களாக தமிழகத்தில் கொட்டித் தீர்த்த வடகிழக்கு பருவமழையால், பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. அந்தவகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கனமழை காரணமாக நவ.24-ல் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், இதனை ஈடுசெய்யும் விதமாக வருகிற சனிக்கிழமை (ஜன.24) அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இயங்கும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!