News April 28, 2025
சென்செக்ஸ் 1,022 புள்ளிகள் உயர்வு

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,022 புள்ளிகள் உயர்ந்து 80,234 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 292 புள்ளிகள் உயர்ந்து 24,331 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், சன் பார்மா, நெஸ்லே ஆகியவை நிஃப்டியில் அதிக லாபம் பெற்றுள்ளன.
Similar News
News January 12, 2026
காலம் காலமாக போராட வேண்டிய அவலம்: OPS

தமிழக அரசின் வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு உடனடியாக காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என OPS வலியுறுத்தியுள்ளார். காலமுறை ஊதியத்திற்காக காலம் காலமாக போராட வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளதாகவும், அதிக வேலைப்பளு, குறைந்த ஊதியம் என்ற ரீதியில் கிராம உதவியாளர்களின் பணி இருந்து வருவது மிகுந்த வேதனை அளிக்கும் செயல் என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
News January 12, 2026
ஈரானில் இந்தியர்கள் கைதா?

<<18832349>>ஈரானில்<<>> அரசுக்கு எதிரான போராட்டம் வலுத்து வருவதால், அங்கு பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், அங்கு கலவரத்தில் ஈடுபட்டதாக 6 இந்தியர்கள் கைது செய்யப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலானது. இந்த செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என இந்தியாவிற்கான ஈரான் தூதர் முகமது ஃபதலி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் நிலைமை குறித்த உடனடி தகவல்களுக்கு நம்பகமான செய்தி நிறுவனங்களை அணுகவும் அறிவுறுத்தியுள்ளார்.
News January 12, 2026
AI-ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா?

மனிதர்களின் கைகளை மீறி போகும் முன் AI-ஐ கட்டுப்படுத்த வேண்டும் என AI நிறுவனங்களை மைக்ரோசாஃப்ட் AI CEO முஸ்தபா சுலைமான் அறிவுறுத்தியுள்ளார். உங்களால் கட்டுப்படுத்த முடியாத ஒன்றை நீங்கள் வழிநடத்த முடியாது. அதனால் தான் மனிதர்களின் மேற்பார்வையில் ‘Super Intelligence’ நோக்கிய பயணம் அமைய வேண்டும் என்கிறோம். எனவே, மனிதர்களுக்கு தீங்கிழைக்காத வகையில் AI-ஐ மேம்படுத்தவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


