News April 9, 2024
முதல் முறையாக வரலாற்று உச்சம் தொட்ட சென்செக்ஸ்

வாரத்தின் 2ஆம் நாளான இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, முதல் முறையாக வரலாற்று உச்சமாக பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 381.78 புள்ளிகள் உயர்ந்து 75,124.28 புள்ளிகளாகவும், தேசிய குறியீட்டு எண் நிஃப்டி 98.80 புள்ளிகள் உயர்ந்து 22,765.10 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முக்கிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன.
Similar News
News January 17, 2026
முகமது அலி பொன்மொழிகள்

*அடித்து வீழ்த்தப்பட்டால் நீங்கள் தோற்கமாட்டீர்கள். கீழேயே இருந்தால் நீங்கள் தோற்றுவிடுவீர்கள். *நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். *ஆபத்துக்களை எதிர்கொள்ளத் தைரியம் இல்லாதவர்கள், வாழ்க்கையில் எதையும் சாதிக்க மாட்டார்கள். *நான் தான் வெல்லப் போகிறேன் என்ற மன உறுதியுடன் ஒருவன் இருக்கும் போது, அவனை வெல்வது கடினம். *என் வலுவான எதிராளி எப்பொழுதும் நான்தான்.
News January 17, 2026
தொடரும் வேட்டை.. 7,800 சூதாட்ட தளங்கள் முடக்கம்

நேற்று ஒரேநாளில் 242 சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. கடந்த அக்டோபரில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா அமலான நிலையில், இதுவரை 7,800 சூதாட்ட தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத சூதாட்டத்தில் அடிமையாகி மக்கள் பணத்தை இழப்பதை தவிர்க்க, சூதாட்ட தளங்களை முடக்கும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
News January 17, 2026
தமிழ் இயக்குநர்கள் தெலுங்கு பக்கம் தாவ இதுவா காரணம்?

அட்லியை தொடர்ந்து தற்போது லோகேஷும், அல்லு அர்ஜுன் நடிப்பில் புதிய படத்தை இயக்க உள்ளார். இதற்கிடையே, ஜூனியர் NTR நடிப்பில் நெல்சன் புதி படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழில் பெரும் சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயங்குவதாலும், தெலுங்கில் ₹75 கோடி முதல் ₹100 கோடி வரை சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் முன்வருவதாலும், தமிழ் இயக்குநர்கள் இத்தகைய முடிவை எடுப்பதாக கூறுகின்றனர்.


