News July 8, 2025
யஷ் தயாள் மீது பரபரப்பு FIR!

RCB வீரர் யஷ் தயாள் மீது உ.பி.யில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. காஜியாபாத்தை சேர்ந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், அவர் மீது இந்த FIR பதியப்பட்டுள்ளது. யஷ் தயாள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. முதல்வர் குறை தீர்க்கும் போர்டல் மூலம் இளம் பெண் ஒருவர் அவர் மீது, பாலியல் குற்றச்சாட்டு புகார்கள் வைத்துள்ளார்.
Similar News
News September 14, 2025
BREAKING: கனமழை கொட்டித் தீர்க்கும்.. அலர்ட்

வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வரும் 17-ல் ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், 20-ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால், கவனமாக இருங்க நண்பர்களே!
News September 14, 2025
காங் – RJD கூட்டணி முறிகிறதா?

பிஹாரில் காங்.,-RJD இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. இதையடுத்து, மாநிலத்தின் 243 தொகுதிகளிலும் RJD தனித்து போட்டியிடும் என அக்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளார். இந்நிலையில், தேஜஸ்வி உடன் காங்., மேலிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பிஹாரில் JD(U)- BJP கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தாண்டு இறுதியில் அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
News September 14, 2025
போன் Airplane Mode-ல் இவ்வளோ நன்மைகள் இருக்கா?

✧Dry ஆகும் நேரத்தில், சீக்கிரமாக போன் ஆப் ஆகாமல் இருக்க Airplane mode உதவும். ✧சீக்கிரமாக Charge ஏற, Airplane Mode ஆன் செய்துட்டு, Charge போடுங்க. ✧இந்த ஆண்ட்ராய்டு ஜெனரேஷனில் கவனம் சிதறலை தடுக்க, Airplane Mode உதவும். இன்டர்நெட் தடைபடுவதுடன், தேவையற்ற கம்பெனி அழைப்புகளும் நிறுத்த இது உதவுகிறது. ✧Airplane Mode மூலம் போனின் கதிர்வீச்சை குறைக்கும் என்றும் கூறுகின்றனர். SHARE IT.