News April 12, 2025
திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் காலமானார்

திரிணாமூல் காங்கிரஸ் மூத்தத் தலைவர் அப்துல் ரசாக் மாெல்லா (90) பிரெய்ன் ஸ்ட்ரோக் ஏற்பட்டு காலமானார். கடந்த 1972-2021 வரை MLA-வாக இருந்துள்ளார். மே.வங்கத்தில் புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையில் இடதுசாரி அரசு ஆட்சியில் நிலம், நில சீர்திருத்தத் துறை அமைச்சராக இருந்தார். சிங்கூர் நில விவகாரத்தில் புத்ததேவ் அரசை விமர்சித்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து திரிணாமூலில் சேர்ந்தார்.
Similar News
News November 19, 2025
விடுமுறை.. தமிழக அரசு ஹேப்பி நியூஸ்

சனி, ஞாயிறு வார விடுமுறையொட்டி சிறப்பு பேருந்துகளை TNSTC அறிவித்துள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து நவ.21 அன்று 340 பேருந்துகளும், நவ.22 அன்று 350 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. அதேபோல், ஈரோடு, திருப்பூர், கோவை, பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்தும் 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்கள், இங்கே <
News November 19, 2025
3.5 பில்லியன் வாட்ஸ்அப் தரவுகள் ஆபத்தில் உள்ளதா?

தரவு கசிவு காரணமாக வாட்ஸ்அப் பயனர்களின் தனியுரிமை ஆபத்தில் இருப்பதாக வியன்னா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது. வாட்ஸ்அப்பில் உள்ள பெரிய பாதுகாப்பு குறைபாட்டை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். உலகளவில் 3.5 பில்லியன் பயனர்களின் தொலைபேசி எண் மற்றும் சுயவிவரத் தகவல் கசியும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளனர். மேலும், ஹேக்கிங் செய்யாமலேயே எளிதாக திருடலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
News November 19, 2025
PM மோடியிடம் 9 கோரிக்கைகள் வைத்த EPS

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை, PM மோடி விரைந்து நிறைவேற்றி தர வேண்டும் என EPS வலியுறுத்தியுள்ளார். கோவை விமான நிலையத்தில் PM மோடியை வரவேற்ற EPS, அவரிடம் இயற்கை விவசாயத்திற்கான ஆதரவு, பம்ப் செட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட 9 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளார். மேலும், காகிதப் பொருள் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் ஜிஎஸ்டி வரியை 5% ஆக குறைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.


