News April 10, 2024

மோடியை புறக்கணித்த பாஜக மூத்த தலைவர்கள்

image

உத்தர பிரதேசத்தின் பிலிப்பித்தில் பிரதமர் மோடியின் கூட்டத்தை பாஜக மூத்த தலைவர்கள் மேனகா காந்தி, மகன் வருண் காந்தி புறக்கணித்தது அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிலிப்பித் எம்பியாக 1996 முதல் இருவரும் மாறி மாறி பதவி வகித்தனர். இம்முறை வருண் காந்திக்கு பாஜக வாய்ப்பளிக்கவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் உள்ள நிலையில், மோடியின் நேற்றைய கூட்டத்தை 2 பேரும் புறக்கணித்தனர்.

Similar News

News January 21, 2026

வைத்திலிங்கம் திமுகவில் இணைய இதுதான் காரணமா?

image

KAS பேச்சுவார்த்தை நடத்தியும் மசியாத வைத்திலிங்கம், செந்தில் பாலாஜியின் காய்நகர்த்தலின்படி திமுகவில் இணைந்துள்ளார். இவருடைய இந்த முடிவுக்கு திரைமறைவில் நடந்த டீலிங் தான் காரணம் என்கின்றனர். அதாவது, வரும் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியின் சீட்டை வைத்திலிங்கம் (அ) அவரது மகன் பிரபுவுக்கு வழங்குவதாக ஸ்டாலின் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் திமுகவுக்கு தாவியுள்ளார் என்கின்றனர்.

News January 21, 2026

வெறுப்பு கருத்துகளை பேசுகிறார் உதயநிதி: கோர்ட்

image

சனாதன தர்மத்துக்கு எதிராக உதயநிதி வெறுப்பு கருத்துகளை பேசுவதாக சென்னை HC மதுரை கிளை சாடியுள்ளது. 2023-ல் சனாதனம் பற்றி பேசிய வழக்கை விசாரித்த கோர்ட், இந்து மதத்தின் மீது திகவும், திமுகவும் கடந்த 100 ஆண்டுகளாக தாக்குதல் நடத்துகின்றன என கூறியுள்ளது. மேலும், வெறுப்பு கருத்தை பேசுபவர்கள் தப்பித்துவிடுவதாகவும், அதனை எதிர்ப்பவர்களே தண்டிக்கப்படுவதாக கூறி அமித் மாளவியா மீதான வழக்கை ரத்து செய்துள்ளது.

News January 21, 2026

இனி ரயில்வே ஸ்டேஷன்களில் ₹14 தான்!

image

ரயில்வே ஸ்டேஷன்களில் ‘<<17789708>>ரயில் நீர்<<>>’ 1 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் ₹14-க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், விற்பனையாளர்களிடம் ‘ரயில் நீர்’ பாட்டில்கள் காலியானால், மற்ற தண்ணீர் பாட்டில்களையும்(Aquafina, Bisleri) ₹14-க்குதான் விற்க வேண்டும் என தற்போது IRCTC உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அதிக விலைக்கு விற்பனை செய்தால், 139 என்ற ரயில்வே உதவி எண்ணில் புகார் அளிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!