News March 23, 2025

பேச்சுவார்த்தையில் செங்கோட்டையன் சமாதானம்

image

இபிஎஸ்சை செங்கோட்டையன் புறக்கணித்ததால், அவர் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்பட்டது. இதையடுத்து அவருடன் அதிமுகவின் மூத்தத் தலைவர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் செங்கோட்டையன் சமாதானம் ஆனதாகக் கூறப்படுகிறது. இதை சுட்டிக்காட்டிய அதிமுக நிர்வாகிகள், இபிஎஸ்- செங்கோட்டையன் இடையே கருத்து வேறுபாடு இல்லை, 2026 தேர்தலே அதிமுக இலக்கு எனக் கூறியுள்ளனர்.

Similar News

News March 24, 2025

மார்ச் 24: வரலாற்றில் இன்றைய தினம்

image

*1947- மவுண்ட்பேட்டன் இந்தியாவின் கவர்னர் ஜெனரலானார். *1988 – பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் மறைந்த நாள். *1993 – ஷூமேக்கர்- லேவி வால் நட்சத்திரம் கண்டறியப்பட்டது. *காங்கிரஸ் கட்சி உறுப்பினரல்லாத, முதல் பிரதமராக மொரார்ஜி தேசாய் தேர்ந்தெடுக்கப்பட்டார் (1977) *பூடான் மக்களாட்சிக்கு மாறியது. முதல் பொதுத் தேர்தல் நடந்தது (2008) *2020 – கொரோனா வைரஸ்: இந்தியாவில் முழு ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார்.

News March 24, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: ஒப்புரவறிதல் ▶குறள் எண்: 216
▶குறள்: பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின்.
▶பொருள்: ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்.

News March 24, 2025

மகிழ்ச்சியான மனநிலைக்கு தினமும் 10 நிமிடம் ஓடுங்கள்

image

தினமும் 10 நிமிடம் ஓடுவதன் மூலம் மகிழ்ச்சியான மனநிலை ஏற்படும் என்கின்றனர் ஜப்பானிய ஆய்வாளர்கள். ஓடுவதால் பெருமூளை தமனியில் ரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரித்து, மூளையின் செயல்பாடு அதிகரிக்கிறது, மூலையில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது. மேலும் மூளையின் முன்புரணியை தூண்டுவதன் மூலமாக, மூளை சிறப்பாக செயல்பட்டு மகிழ்ச்சி ஏற்படும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

error: Content is protected !!