News April 24, 2025
‘எடப்பாடியாரை வணங்கி’ செங்கோட்டையன் புகழாரம்!

இபிஎஸ் – செங்கோட்டையன் இடையே கருத்துவேறுபாடு நிலவுவதாக கூறப்படும் நிலையில், சட்டப்பேரவையில் இன்று ‘எடப்பாடியாரை வணங்கி’ என செங்கோட்டையன் பேசியுள்ளார். மேலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போல் இபிஎஸ் நல்லாட்சி நடத்தியதாக புகழாரம் சூட்டியுள்ளார். இது, இபிஎஸ் – செங்கோட்டையன் இடையேயான பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்ததை போல் இருப்பதாகப் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?
Similar News
News November 19, 2025
இந்த மாதிரி எலுமிச்சை பார்த்திருக்கீங்களா?

எலுமிச்சை, இந்தியாவில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுவதோடு, உற்பத்தியாளர்களுக்கு நல்ல வருமானத்தைத் தருகிறது. இந்த எலுமிச்சையில் பல வகைகள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா? சில வகைகளை பார்க்கும்போது, இப்படியெல்லாம் எலுமிச்சை இருக்கிறதா என்று நம்மை ஆச்சரியப்பட வைக்கும். அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 19, 2025
நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா.. PM-க்கு விவசாயிகள் கோரிக்கை

நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு PM மோடியிடம் தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இயற்கை வேளாண் மாநாட்டில் பேசிய பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர், விவசாயத்தில் புரட்சி செய்த நம்மாழ்வாருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று PM மோடியிடம் மேடையிலேயே வலியுறுத்தினர். இது, இயற்கை விவசாயத்தில் பல சாதனைகள் செய்த நம்மாழ்வாரை சிறப்பிக்கும் வகையில் அமைந்திடும் என்றும், அவர்கள் கூறினர்.
News November 19, 2025
BREAKING: தங்கம் விலை அதிரடி மாற்றம்

கடந்த 5 நாள்களாக குறைந்து வந்த 22 கேரட் தங்கத்தின் விலை இன்று (நவ.19) காலை, கிராமுக்கு ₹100 உயர்ந்து ₹11,500-க்கும், சவரனுக்கு ₹800 உயர்ந்து ₹92,000-க்கும் விற்பனையானது. இந்நிலையில், மீண்டும் கிராமுக்கு ₹100 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ₹11,600-க்கும், சவரன் 92,800-க்கும் விற்பனையாகிறது. ஒரேநாளில் ₹1,600 உயர்ந்ததால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


