News April 24, 2025
‘எடப்பாடியாரை வணங்கி’ செங்கோட்டையன் புகழாரம்!

இபிஎஸ் – செங்கோட்டையன் இடையே கருத்துவேறுபாடு நிலவுவதாக கூறப்படும் நிலையில், சட்டப்பேரவையில் இன்று ‘எடப்பாடியாரை வணங்கி’ என செங்கோட்டையன் பேசியுள்ளார். மேலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போல் இபிஎஸ் நல்லாட்சி நடத்தியதாக புகழாரம் சூட்டியுள்ளார். இது, இபிஎஸ் – செங்கோட்டையன் இடையேயான பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்ததை போல் இருப்பதாகப் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?
Similar News
News November 13, 2025
எமினெம் பொன்மொழிகள்

*இழப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை, ஆனால் அடைவதற்கு ஏதோ ஒன்று இருக்கிறது. *காதல் என்பது வெறும் வார்த்தை மட்டுமே, நீங்கள் தான் அதற்கு பொருள் கொடுக்கிறீர்கள். *ஒவ்வொரு வெற்றிகரமான நபருக்குப் பின்னாலும் அவரை வெறுப்பவர்களின் கூட்டம் உள்ளது. *அனைத்தும் ஏதோ ஒரு காரணத்திற்காக நடக்கிறது. *இந்த தருணத்தை வீணாக்காதீர்கள். ஏனெனில் அனைத்தும் எப்போது முடிந்து போகும் என்று உங்களுக்குத் தெரியாது.
News November 13, 2025
இந்தியாவிற்கு ஒருநாள் கழித்து.. PAK-க்கு உடனே ஓடி வந்த USA

தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த ஒருநாள் கழித்து இரங்கல் தெரிவித்த அமெரிக்கா, தனது X பதிவில் தீவிரவாதம் என்ற வார்த்தையை குறிப்பிடவே இல்லை. ஆனால், பாகிஸ்தானில் கார் குண்டு வெடிப்பு நடந்த உடனே இரங்கல் தெரிவித்து பதிவிட்டு, தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானுடன் நிற்பதாக தெரிவித்துள்ளது.
News November 13, 2025
ஒரு கவுன்சிலர் கூட இல்லாத தவெக, திமுகவிற்கு போட்டியா?

ஆதவ் அர்ஜுனா பணத்தை வைத்து ஆட்சியை பிடித்துவிடலாம் என நினைப்பதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். ஒரு கவுன்சிலர் கூட இல்லாத தவெக, 2026 தேர்தலில் திமுக vs தவெக இடையேதான் போட்டி என கூறுவது விந்தையிலும் விந்தை என்றும் அவர் கூறியுள்ளார். தேர்தலின் போது கூட்டத்தை யார் வேண்டுமானாலும் கூட்டிவிடலாம், ஆட்சிக்கு வர வேண்டும், மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


