News September 5, 2025
செங்கோட்டையன் மனம் திறக்கவில்லை: திருமா

செங்கோட்டையன் சொன்னது போல் முழுமையாக, மனம் திறந்து பேசவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றி பேச விரும்பவில்லை, ஆனாலும் அவர் இன்னும் வெளிப்படையாகவே பேசியிருக்கலாம் எனவும் கூறியுள்ளார். பெரியார் இயக்கம் என்ற முறையில் விசிக, அதிமுகவை பெரிதும் மதிக்கிறது என்றார்.
Similar News
News September 5, 2025
EVM-க்கு பதில் வாக்குச்சீட்டில் தேர்தல்.. கர்நாடகாவில் ட்விஸ்ட்

வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் EVM-க்கு பதிலாக வாக்குச்சீட்டை பயன்படுத்த கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக சட்ட திருத்தம் செய்து, மாநில தேர்தல் ஆணையத்திற்கு சிபாரிசு செய்யப்பட உள்ளது. வாக்கு திருட்டு, பாஜகவிற்கு ஆதரவாக ECI செயல்படுவதாக ராகுல் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், கர்நாடகா Cong அரசு இம்முடிவை எடுத்துள்ளது. ஆனால், தோல்வி பயத்தில் இப்படி செய்வதாக பாஜக விமர்சித்துள்ளது.
News September 5, 2025
ராணி கேத்தரின் காலமானார்

பிரிட்டன் அரசக் குடும்பத்தின் மூத்த உறுப்பினரான கென்ட் சீமாட்டி என்று அழைக்கப்படும் கேத்தரின் (92) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவர் அமைதியான முறையில் இயற்கை எய்தியதாக அரசக் குடும்பம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் பேரனும், கென்ட் இளவரசருமான எட்வர்டை மணந்தவர் தான் கேத்தரின். பல அறப்பணிகளை இவர் செய்து வந்தார். RIP!
News September 5, 2025
Beauty: கரும்புள்ளிகளால் கவலையா? சரி செய்வது ஈஸி

முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் காரணமாக சிலர் நம்பிக்கை இழக்கின்றனர். இதனை சரி செய்ய பல எளிய வழிகள் இருக்கின்றன. ➤எலுமிச்சை சாறை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவலாம். ➤தூங்குவதற்கு முன் கற்றாழையை முகத்தில் தடவி, காலையில் கழுவவும் ➤மஞ்சள் மற்றும் பாலை சேர்த்து பேஸ்ட் போல கரும்புள்ளியில் தடவலாம். இதனை தொடர்ந்து செய்துவந்தால் கரும்புள்ளிகள் நீங்கும் என கூறுகின்றனர். SHARE.