News October 24, 2025

கட்சிக்கு கெடு விதிக்கவில்லை: செங்கோட்டையன் விளக்கம்

image

அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க கட்சி தலைமைக்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்தது பெரும் பரபரப்பை கிளப்பியது. பின்னர் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், அமித்ஷாவை சந்தித்ததை அடுத்து, அமைதி காத்து வந்தார். இந்நிலையில் கட்சிக்கு கெடு எதுவும் விதிக்கவில்லை என்றும் 10 நாட்களில் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்றே கூறியதாகவும் அவர் புதிய விளக்கத்தை கொடுத்துள்ளார்.

Similar News

News October 24, 2025

நாப்கின் பயன்படுத்தும் பெண்களுக்கு ஆபத்தா? PHOTOS

image

இந்தியாவில் 64% பெண்கள் சானிட்டரி நாப்கின் பயன்படுத்துகின்றனர். ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்தப்படுகிறது. அவற்றிலுள்ள வேதிப்பொருள்கள் அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். மேலே உள்ள போட்டோக்களை ஸ்வைப் செய்து அதன் ஆபத்துகளை காணலாம். இதற்கு பதிலாக மென்ஸ்ட்ருவல் கப், காட்டன் நாப்கின் போன்ற மாற்றுகளை பயன்படுத்தலாம். இதை SHARE பண்ணலாமே!

News October 24, 2025

பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான புதிய அறிவிப்பு

image

RTE-ன் படி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அக்.30 & 31 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்காக 81,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அக்.30-ல், விண்ணப்பங்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை நடைபெறும். அக்.31-ல், விண்ணப்பங்கள் அதிகமாக உள்ள பள்ளிகளில், குலுக்கல் முறையில் (Random Selection) மாணவர் தேர்வு & சேர்க்கை நடத்தப்படவுள்ளது.

News October 24, 2025

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் S.I.R.

image

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் S.I.R. தொடங்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தியாகராய நகர் தொகுதி வாக்காளர் நீக்கம், சேர்ப்புக்கு எதிரான வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் உள்ளிட்ட தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் தொடங்குவதாக ECI தெரிவித்துள்ளது.

error: Content is protected !!