News October 30, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
Similar News
News October 30, 2025
கலிலியோ பொன்மொழிகள்

*உங்களால் ஒரு மனிதனுக்கு எதையும் கற்றுக்கொடுக்க முடியாது, அவன் அதை தனக்குள்ளே தேடிக்கொள்ள மட்டுமே உதவ முடியும்.
*அனைத்து உண்மைகளும் எளிதில் புரிந்துகொள்ள கூடியவையே, ஆனால் முதலில் அதை கண்டுபிடிக்க வேண்டும்.
*உங்களை நீங்கள் அறிவதே மிகச் சிறந்த ஞானம்.
*அளவிடக்கூடியதை அளவிடுங்கள், அளவிட முடியாததை அளவிடக் கூடியதாக ஆக்குங்கள்.
News October 30, 2025
ராமரே இல்லை என காங்., கூறுகிறது: யோகி ஆதித்யநாத்

கடவுள் ராமர் என்பவரே இல்லை என கூறும் காங்., இறைவனின் இருப்பையே கேள்விக்குள்ளாக்குவதாக உ.பி., CM யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். ராமரின் தேரை லாலு பிரசாத் யாதவ்வின் RJD நிறுத்தியதாகவும், சமாஜ்வாதி கட்சி ராம பக்தர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கடுமையாக சாடினார். பிஹார் தேர்தல் பிரசாரம் கடும் மோதல் போக்கில் உள்ள நிலையில், மகாபந்தன் கூட்டணியை தாக்கி யோகி கூறியது பேசுபொருளாகியுள்ளது.
News October 30, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 504 ▶குறள்: குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். ▶பொருள்: ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வர வேண்டும்.


