News December 4, 2024

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஜனவரியில் அரையாண்டு தேர்வு

image

வெள்ளம் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்பாதபட்சத்தில் ஜனவரியில் அரையாண்டு தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. புயல் மழையால் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி அரையாண்டு தேர்வு நடத்தப்படுமா? என கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ், ஜனவரியில் தேர்வு நடத்தப்படும் என்றார்.

Similar News

News December 3, 2025

டிசம்பர் 3: வரலாற்றில் இன்று

image

*1884– இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் பிறந்தநாள். *1971-இந்தியாவின் விமானப்படை தளங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதால், INDO-PAK போர் ஆரம்பித்தது. *1984–போபால், நச்சு வாயு கசிவு விபத்தில் 3,800 மக்கள் உயிரிழப்பு. *1979–ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த் மறைந்த நாள். *1998–கவிஞர் முடியரசன் மறைந்த நாள்.

News December 3, 2025

இலங்கைக்கு மருத்துவ குழுவை அனுப்பிய இந்தியா

image

டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு பல உதவிகளை இந்தியா செய்து வருகிறது. இந்நிலையில், ஆபரேஷன் சாகர்பந்துவின் ஒரு பகுதியாக 70 பேர் கொண்ட மருத்துவ குழுவை IAF C-17 விமானத்தில் இந்தியா அனுப்பியுள்ளது. அவர்கள் இலங்கையில் தற்காலிக மருத்துவ முகாம்களை அமைத்து மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்காக இலங்கை அரசு மட்டுமின்றி சனத் ஜெயசூர்யா உள்ளிட்ட பிரபலங்களும் நன்றி கூறியுள்ளனர்.

News December 3, 2025

ஜெயிலர் 2-ல் இணைந்த மாஸ் வில்லன்

image

ரஜினியின் ‘ஜெயிலர்’ வெற்றி பெற்றதில், வில்லனாக (வர்மன்) நடித்திருந்த விநாயகனுக்கும் முக்கிய பங்குண்டு. முதல் பாகத்தில் இவர் இறப்பது போன்ற காட்சிகள் இருந்தாலும், ஜெயிலர் 2-விலும் வர்மன் கதாபாத்திரம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அவரே ஒரு நேர்காணலில் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் படக்குழு விதித்துள்ள கட்டுப்பாட்டால், அதைப்பற்றி முழுமையாக சொல்ல முடியாது என்றும், அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!