News December 4, 2024
வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஜனவரியில் அரையாண்டு தேர்வு

வெள்ளம் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்பாதபட்சத்தில் ஜனவரியில் அரையாண்டு தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. புயல் மழையால் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி அரையாண்டு தேர்வு நடத்தப்படுமா? என கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ், ஜனவரியில் தேர்வு நடத்தப்படும் என்றார்.
Similar News
News December 24, 2025
2040-க்குள் நிலவில் இந்தியர்கள் தடம் பதிப்பார்கள்: நாராயணன்

2026 இஸ்ரோவிற்கு மிகவும் முக்கியமான ஆண்டாக இருக்கும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும், ‘ககன்யான்’ திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், 3 ஆளில்லா விண்கலங்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார். 2027-ல் குலசேகரப்பட்டினம் ஏவுதளம் பயன்பாட்டுக்கு வரும் என்றும், 2040-க்குள் இந்தியர்களை நிலவில் தரையிறங்க வைக்க திட்டம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News December 24, 2025
டிகிரி போதும்.. வங்கியில் ₹64,820 சம்பளம்!

பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள 514 Credit Officers பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ✦கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ✦வயது: 25- 40 ✦தேர்ச்சி முறை: Online Test, Personal Interview ✦20-ம் தேதி முதல் ஜனவரி 5-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம் ✦ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News December 24, 2025
காதலியின் அந்தரங்க போட்டோ… காதலன் சிக்கினான்

கேரளாவில் காதலியின் அந்தரங்க போட்டோக்களை வைத்து மிரட்டிய காதலன் முகமது சஹத்(19) கைது செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்டா மூலம் இருவரும் பழகியுள்ளனர். நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. அந்த சமயத்தில், காதலியிடம் ஆசை வார்த்தை கூறி அவரது அந்தரங்க போட்டோக்களை சஹத் வாங்கியுள்ளார். கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரியவே, அந்த போட்டோக்களை வைத்து அவர் மிரட்டியுள்ளார். பெண் அளித்த புகாரில் சஹத் சிக்கியுள்ளார்.


