News December 4, 2024

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஜனவரியில் அரையாண்டு தேர்வு

image

வெள்ளம் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்பாதபட்சத்தில் ஜனவரியில் அரையாண்டு தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. புயல் மழையால் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி அரையாண்டு தேர்வு நடத்தப்படுமா? என கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ், ஜனவரியில் தேர்வு நடத்தப்படும் என்றார்.

Similar News

News November 13, 2025

பாமக பிரச்னைக்கு இதுதான் தீர்வு: பாமக பாலு

image

G.K.மணி உள்ளிட்டோர் ராமதாஸை தவறாக வழிநடத்தி கொண்டிருக்கிறார்கள் என்று வழக்கறிஞர் பாலு குற்றஞ்சாட்டியுள்ளார். மாம்பழம் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் தரப்பில் எழுதப்பட்ட கடிதத்தில் பல தவறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், ஜி.கே.மணியும், அருளும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தால் போதும், பாமகவில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் உடனே முடிவுக்கு வந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.

News November 13, 2025

TET தேர்வுக்கான ஹால்டிக்கெட் எடுப்பதில் சிக்கல்

image

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தாள்-1 தேர்வு வரும் 15-ம் தேதியும், தாள்-2 தேர்வு 16-ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாக தேர்வர்கள் குற்றம்சாட்டுகின்றனர். முக்கியமாக ஹால்டிக்கெட்டின் பாஸ்வேர்டை மறந்தவர்கள், OTP எண் மூலம் அதை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என புகார் அளித்துள்ளனர்.

News November 13, 2025

அதிமுகவில் இருந்து நீக்கினார்

image

கிருஷ்ணகிரி அதிமுக முக்கிய நிர்வாகியும், கவுன்சிலருமான நாகஜோதியை கட்சியிலிருந்து நீக்கி EPS அறிவித்துள்ளார். கிருஷ்ணகிரி நகராட்சி சேர்மன் பரிதா நவாப்புக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவருக்கு ஆதரவாக நாகஜோதி வாக்களித்தார். திமுகவை சேர்ந்த பரிதா நவாப்பின் பதவியை சொந்த கட்சியினரே பறித்தனர். வரும் தேர்தலில் கிருஷ்ணகிரியில் கட்டாயம் வெற்றி பெற திமுகவினருக்கு CM ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

error: Content is protected !!