News December 4, 2024

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஜனவரியில் அரையாண்டு தேர்வு

image

வெள்ளம் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்பாதபட்சத்தில் ஜனவரியில் அரையாண்டு தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. புயல் மழையால் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி அரையாண்டு தேர்வு நடத்தப்படுமா? என கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ், ஜனவரியில் தேர்வு நடத்தப்படும் என்றார்.

Similar News

News December 10, 2025

வேடசந்தூர் அருகே சரமாரியாக குத்திக் கொலை!

image

வேடசந்தூர் அருகே கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வேடசந்தூர் ராஜகோபாலபுரத்தை சேர்ந்த செந்தில் (27) என்பவரை, வேடசந்தூர் லட்சுமணன்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் (24) என்பவர் கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்தார். இதுகுறித்து வேடசந்தூர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு கொலை செய்த முத்துக்குமாரை கைது செய்து, அவரிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 10, 2025

70 லட்சம் பேர் நீக்கமா? தமிழகத்தில் அதிர்ச்சி

image

SIR படிவங்களை <<18520115>>சமர்ப்பிக்க நாளை கடைசி<<>> நாளாகும். வரும் 16-ம் தேதி வரைவு வாக்காளர்கள் பட்டியலை ECI வெளியிட உள்ளது. அதில், இறந்தவர்கள் 25 லட்சம், இடம் மாறியவர்கள் 40 லட்சம், இரட்டைப் பதிவு 5 லட்சம் என சுமார் 70 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படலாம் எனத் தகவல் கசிந்துள்ளது. உங்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருந்தால் டிச.16 முதல் ஜன.15 வரை விண்ணப்பிக்கலாம்.

News December 10, 2025

₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தது HAPPY NEWS

image

புதிதாக மகளிர் உரிமைத் தொகை 2.0 திட்டத்தில் இணைந்தவர்களின் வங்கிக் கணக்கில் டிச.12-ல் ₹1,000 வரவு வைக்கப்படவுள்ளது. அன்றைய தினம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், CM ஸ்டாலின் இதனை தொடங்கி வைக்கிறார். அப்போது ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. மேலும், தகுதியானவர்கள் விடுபட்டிருந்தால் கோட்டாட்சியரிடம் முறையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!