News March 16, 2024
வாக்களிப்பதன் அவசியம் குறித்து செல்ஃபி பாயிண்ட்

திருவண்ணாமலை தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தெ. பாஸ்கர பாண்டியன்
100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்ட் அருகே செல்ஃபி எடுத்து நின்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கினார்.
உடன் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News January 20, 2026
தி.மலை: சிலிண்டர் வெடித்து விபத்து; விரைந்த கலெக்டர்

மணலூர்பேட்டையில் பலூன் சிலிண்டர் வெடித்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும், மருத்துவர்களிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
News January 20, 2026
அறிவித்தார் தி.மலை கலெக்டர்

திருவண்ணாமலையில் மாவட்ட அளவில் டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நேரடியாக நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். அதிகாரிகள் நேரடியாக பதில் தர உள்ளனர். ஷேர் பண்ணுங்க.
News January 20, 2026
தி மலை: காவல்துறை இரவு ரொந்து பணி விவரம் வெளியீடு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.


