News March 16, 2024

வாக்களிப்பதன் அவசியம் குறித்து செல்ஃபி பாயிண்ட்

image

திருவண்ணாமலை தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தெ. பாஸ்கர பாண்டியன்
100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்ட் அருகே செல்ஃபி எடுத்து நின்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கினார்.
உடன் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News August 10, 2025

திருவண்ணாமலையில் இயற்கை விவசாய சந்தை

image

திருவண்ணாமலை பெரியார் சிலை அருகே அமைந்துள்ள தனியார் பள்ளி வளாகத்தில் இன்று (ஆக.10) இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக ரசாயனம் கலப்படம் செய்யப்படாத இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், மூலிகை வகைகள், கீரைகள், நாட்டு விதைகள், மரபு விதைகள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டது. ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர்.

News August 10, 2025

தி.மலை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 10, 2025

தி.மலை: ரயில்வேயில் சூப்பர் வேலை; கைநிறைய சம்பளம்

image

ரயில்வேயில் மருத்துவப் பிரிவில் செவிலியர் கண்காணிப்பாளர், பார்மசிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 434 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 12th, நர்சிங், B.Pharma என பணிகளுக்கு ஏற்றவாறு கல்வி தகுதி மாறுபடும். மாதம் ரூ.25,500-ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது உள்ளவர்கள் <>இந்த லிங்கில் <<>>வரும் செ.8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!