News May 7, 2025

சீமான் தலை துண்டாக்கப்படும்.. இன்ஸ்டாவில் கொலை மிரட்டல்

image

’சீமானின் தலை விரைவில் துண்டாக்கப்படும், அடுத்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி ஏற்படும்’ என தேனியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாகக் கூறி, இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட நாதகவினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சமீபத்தில் தெலுங்கர்கள் குறித்து சீமான் அவதூறாகப் பேசியதாக போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 30, 2025

தருமபுரியில் விலை உயர்வு!

image

தருமபுரி உழவர்சந்தைக்கு கடந்த சில வாரங்களாக முருங்கைக்காய் வரத்து குறைந்ததால் அதன் விலை அதிகரித்தது. பின்னர் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது. இந்த நிலையில் சந்தைக்கு வரத்து மீண்டும் குறைந்ததால் நேற்று முருங்கைக்காய் விலை கிலோவுக்கு ரூ.10 அதிகரித்தது. தருமபுரி உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டது. தனியாக ஒரு முருங்கைக்காய் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.

News December 30, 2025

நடிகை நந்தினி தற்கொலை.. பரபரப்பு தகவல்

image

கௌரி சீரியல் நடிகை நந்தினி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூருவில் தங்கியிருந்த அவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இறப்பதற்கு முன் அவர் கைப்பட எழுதிய கடிதத்தை போலீஸ் கைப்பற்றியுள்ளது. அதில் திருமணத்திற்கு பெற்றோர் வற்புறுத்தியதால், மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் விரைவில் தெரியவரும்.

News December 30, 2025

பல்கலை., மசோதாவை திருப்பி அனுப்பினார் ஜனாதிபதி

image

சென்னை பல்கலை., துணை வேந்தரை நீக்கவும், நியமிக்கவும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்த மசோதா 2022-ல் நிறைவேற்றப்பட்டது. கவர்னர் ரவி அதனைத் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2023-ல் கவர்னர் அதை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தார். மசோதாவை 2 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்த முர்மு, தற்போது TN அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.

error: Content is protected !!