News August 10, 2025
தூய்மை பணியாளர்களுக்கு சீமான் ஆதரவு

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை சீமான் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். தூய்மை பணியை தனியாரிடம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பிய சீமான் தூய்மை பணியாளர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் அரசை கேட்டுக்கொண்டார்.
Similar News
News August 10, 2025
பொதுமக்களுக்கு பட்டா… வந்தது புதிய அறிவிப்பு

நகர நிலவரித் திட்ட பணிகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு பட்டா வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சர்க்கார் புறம்போக்கு, அரசு மனை, ராயத்து வாரி மனை என மாற்றம் செய்து நில உடமைதாரருக்கு பட்ட வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 39, 428 உட்பிரிவுகளில் வகைப்பாடு மாற்ற பணிகளை மேற்கொள்ள அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக வருவாய் வட்டாட்சியர், நத்தம் நிலவரி வட்டாட்சியருக்கும் அதிகாரம் தரப்பட்டுள்ளது.
News August 10, 2025
மின்சார கட்டணம் உயருமா? SC-யின் புதிய உத்தரவு

SC-யின் புதிய உத்தரவால் மின்சார கட்டணம் உயர வாய்ப்புள்ளது. மின்சார விநியோக நிறுவனங்களுக்கு தரவேண்டிய மொத்த நிலுவை தொகையையும், அடுத்த 4 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் SC உத்தரவிட்டுள்ளது. 2024 கணக்கின்படி, தமிழக அரசு ₹87,000 கோடி நிலுவை வைத்துள்ளது. இந்நிலையில், மின் கட்டணத்தை உயர்த்துவது தவிர்க்க முடியாதது எனக் கூறப்படுகிறது. ஒருவேளை தேர்தல் வரை தள்ளிப்போகலாம்.
News August 10, 2025
சஞ்சுவின் கம்பேக்கிற்கு காரணம் யார் தெரியுமா?

T20-யில் தான் கம்பேக் கொடுக்க கம்பீர்தான் காரணம் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான தொடரில் 2 போட்டிகளில் டக் டவுட் ஆகி சோகமாக இருந்த போது கம்பீர் தன்னிடம் பேசியதை, சஞ்சு அஸ்வினுடனான பேட்டியில் தெரிவித்துள்ளார். நீங்கள் 21 டக்கவுட் ஆனால்தான் அணியில் இருந்து நீக்குவேன் என அவர் சஞ்சுவிடம் கூறினாராம். கம்பீரின் அதீத நம்பிக்கையால் சஞ்சு அடுத்தடுத்த போட்டிகளில் அசத்தியும் இருந்தார்.