News January 22, 2025

வருண்குமார் வழக்கில் சீமான் நேரில் ஆஜராக உத்தரவு

image

டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில், சீமான் நேரில் ஆஜராக திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக சீமான் மீது, வருண்குமார் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சாட்சியங்கள் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வரும் 19ஆம் தேதி சீமான் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. சீமான் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராக கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 26, 2025

உக்ரைனுக்கு இனி நிதி உதவி கிடையாது: டிரம்ப்

image

உக்ரைனுக்கு இனி அமெரிக்கா நிதி உதவி செய்யாது என டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு உதவி தேவைப்படும் பட்சத்தில் NATO நாடுகள் மூலம் தங்களை அணுக வேண்டும் எனவும், அப்படி அணுகினால் தாங்கள் NATO உடன் ஒப்பந்தம் மேற்கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, ஏற்கனவே அதிக நிதி உதவி செய்துவிட்டதால், உக்ரைனில் உள்ள அரிய கனிமங்களை தங்களுக்கு தர வேண்டும் என டிரம்ப் கூறியிருந்தார்.

News August 26, 2025

பள்ளிகளுக்கு 12 நாள்கள் விடுமுறை

image

செப்டம்பரில் பள்ளிகளுக்கு 12 நாள்கள் விடுமுறையாகும். செப். 5-ம் ஆம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்.26-ல் காலாண்டு விடுமுறை தொடங்குவதால் இம்மாத இறுதியில் தொடர்ச்சியாக 5 நாள்கள் விடுமுறை. இதுதவிர சனி, ஞாயிற்றுக்கிழமைகள் மூலம் 6 நாள்கள் லீவு கிடைக்கிறது. இதனால், மாணவர்களுக்கு அடுத்த மாதம் ஜாலியோ ஜிம்கானா தான்..!

News August 26, 2025

அமித்ஷா அடிக்கடி கூறியதால் சந்தேகம் வந்தது: ராகுல்

image

பாஜக 40- 50 ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்கும் என அமித்ஷா அடிக்கடி கூறியது தனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வாக்கு திருட்டு குறித்த உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும், முதலில் அது குஜராத்தில் தொடங்கி 2014-ல் தேசிய அளவில் பரவியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், வாக்கு திருட்டு தற்போது மற்ற மாநிலங்களிலும் பரவ தொடங்கிவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!